வலைப்பதிவில் தேட..

Thursday, November 29, 2007

சுய இன்பம்

இஸ்லாத்தில் சுயஇன்பம் அனுபவித்தல், ஓரிணச்சேர்க்கை கூடுமா..? தகுந்த திருக்குர்ஆன் வசனம், ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும். இங்கு அதிகமான நண்பர்கள் இந்த ஹதீஸ்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள்..
..........................

Thursday, November 22, 2007

வங்கியின் வட்டி என்னசெய்வது

என்னுடைய வங்கிக் கணக்கில் (Savings account) என் இறுப்புத் தொகைக்கு வட்டி வருகிறது. நான் அதை உபயோகிப்பதில்லை..அந்த தொகையை தர்மமாக கொடுக்கலாமா... அல்லது என்ன செய்வது.? நான் வேலை பார்க்கும் கம்பெனயில் சம்பளமோ, முன் பணமோ கொடுக்கவில்லை.. இங்கு நிறைய சாமான்கள் உள்ளது. எனக்கு வரவேண்டிய தொகைக்கு உள்ள சாமான்களை நான் எடுத்துக் கொள்ளல் கூடுமா..?
வட்டி - வங்கி - முஸ்லிம்கள் என்ற தலைப்பில் விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்று இரண்டு இடங்களில் பதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடுப்பை கீழே கொடுத்துள்ளோம்.
படியுங்கள் மேலதிக விளக்கங்கள், விபரங்களுக்கு கருத்தை எழுதுங்கள்.

காக்க..காக்க

நான் வேற்று மதத்தை சார்ந்தவன். உணமையான இறை வார்த்தை எது என அறிந்து அதன்படி வாழவேண்டும் என்ற வாஞ்சை உடையவன். அதற்காக திருக்குரானை படித்தபோது,

இறைவன் தொழுகை பற்றி குறிப்பிடும் வசனமாகிய 4:102 போர் நேரங்களில் தொழுபவர்கள் பாதி பேர் தொழவேண்டும் மீதிபேர் காவல் நிற்கவேண்டும் என்று சொல்வதோடு திரும்ப திரும்ப எச்சரிக்கையாக இருங்கள் ஆயுதத்தை கீழே வைக்காதீர்கள் என்றெல்லாம் கூறுவது ஒரு சாதாரண பயந்தாங்கல்லி மனிதன் சொல்வது போல் உள்ளது.

தன்னை தொழுபவர்களைகூட அந்த நேரத்தில் காக்க திறமை இல்லாதவரா ஒரு சர்வவல்ல இறைவன்? தன்னை தொழும் போதுகூட காக்க முடியாத இறைவன் நம் வாழ்வின் மாற்ற நேரங்களில் நம்மை எப்படி பாதுகாப்பார்?
சற்று விளக்கவும்.


sundararajdotp(att)gmail.com

முஸ்லிம் said...

நண்பர் சுந்தரராஜ் அவர்கள் சந்தேகக் கேள்வியாக வைக்கும் குர்ஆன் வசனங்களிலேயே அதற்கான விளக்கங்கள் இருக்கின்றன.
தன்னை வணங்குபவர்களைக் கூட இறைவனால் காப்பாற்ற முடியவில்லை எனும் அளவுக்கு இறைவன் பயந்தாங்கோழையா? என்ற கேள்வியை நண்பர் வைத்திருக்கிறார். இது பொதுவாக ஆத்திகவாதிகள் அனைவரையும் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. எனினும் மொத்தமாக ஆத்திவாதிகள் என்ற வட்டத்திற்குள் நாம் செல்ல வேண்டாம்.

தொழுது கொண்டிருக்கும் தன்னுடைய அடியார்களைக் காப்பாற்ற இயலாத கோழையா இறைவன்? என்று நண்பர் சுந்தரராஜ் சொல்லும் இறைவனைப் பற்றியே இங்கு விளக்கமளிப்போம். முதலில் 4:102வது வசனத்தை முழுமையாக இங்கு காண்போம்.

(நபியே) ''நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருந்து அவர்களுக்கு நீர் தொழுகையை நடத்தினால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மோடு (தொழகையில்) நிற்கட்டும். தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். ஸஜ்தா செய்ததும் அவர்கள் உங்களுக்குப் பின்னால் செல்லட்டும். தொழாத மற்ற கூட்டம் வந்து உம்முடன் தொழட்டும். எச்சரிக்கையுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். உங்கள் ஆயுதங்களையும், தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவனமற்று இருப்பதையும், திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புகின்றனர்''... (அல்குர்ஆன், 4:102)

இந்த வசனத்தை மேலோட்டமாகப் படித்தாலே, தன்னைத் தொழும் தன்னடியார்களைக் காப்பாற்றும் முழுப் பொறுப்பிலும் இறைவன் ஈடுபாடு காட்டுகிறான் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த வழியில் செல்லாதீர்கள் இங்கு புதைகுழி அபாயம் இருக்கிறது என்று பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்வதும் அவர்களைக் காப்பாற்றும் முயற்சி தானே. அது போல் தன்னை வணங்கும் அடியார்களைக் காப்பாற்றும் விதமாகவே இந்த வசனத்தில் இறைவன் எச்சரிக்கை விடுத்து அதற்கான வழிமுறைகளை வகுக்கிறான்.

இங்கு எதிரிகளின் திட்டங்கள் முறியடிக்கப்படுகிறது எப்படி?

''உங்கள் ஆயுதங்களையும், தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவனமற்று இருப்பதையும், திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புகின்றனர்...''

இதுதான் எதிரிகளின் வஞ்சகத் திட்டம்.

போர்க்களத்தில் முஸ்லிம்கள் இறைவணக்கத்தில் ஈடுபடுவார்கள். அந்த இறைவணக்கத்தில் ஸஜ்தாவெனும் நெற்றியை நிலத்தில் வைத்து சிரவணக்கம் செய்வார்கள். இந்த தருணத்தில் திடீரென அவர்கள் மீது பாய்ந்து, அவர்களைத் தாக்கி அழித்து விடலாம் என்பது எதிரிகளின் திட்டமாக இருந்தது. அதைத்தான் இறைவன் இங்கு வெளிப்படுத்தி முஸ்லிம்களை எச்சரிக்கை செய்கிறான்.

அதாவது நீங்கள் சிரவணக்கம் செய்யும் நேரத்தில் உங்களைக் கொல்ல நிராகரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே போர்க்களத்தில் முஸ்லிம்கள் அனைவரும் மொத்தமாக சிரவணக்கம் செய்ய வேண்டாம். ஒரு பகுதியினர் சிரவணக்கம் செய்யும் போது இன்னொரு பகுதியினர் ஆயுதங்களோடு எதிரிகளைக் கண்காணித்துக் கொள்ளுங்கள். பிறகு சிரவணக்கம் செய்தவர்கள் எழுந்து எதிரிகளைக் கண்காணிக்கட்டும். ஏற்கெனவே சிரவணக்கம் செய்யாதவர்கள் தொழுகையில் கலந்து கொள்ளட்டும் என்று முஸ்லிம்களுக்கு இறைவன் எச்சரிக்கை வழங்கி அவர்களைக் காப்பற்றுகிறான்.

இதோ எதிரிகளின் வஞ்சகத் திட்டம்.

''முஸ்லிம்கள் (தொழுகை) நிலையில் இருக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களை நாம் தாக்கினால் (வீழ்த்தி விடலாம்'') என்று பேசிக் கொண்டார்கள்.

பின்னர் அவர்களில் சிலர் ''இன்னும் சற்று நேரத்தில் இவர்களுக்கு ஒரு தொழுகை வரும் அது அவர்களுக்கு இவர்களின் மக்களையும், உயிரையும் விட மிகவும் விருப்பமான ஒன்றாகும். (அந்தத் தொழுகையில் அவர்களைத் தாக்கலாம்)'' என்று கூறினர். இந்நிலையில் லுஹ்ருக்கும் அஸருக்கும் இடைப்பட்ட நேரத்தில்(4:102வது) இந்த வசனத்தை வானவர் ஜிப்ரீல் (அலை) கொண்டு வந்தார்கள். (நபிமொழியின் சுருக்கம்: நூல்கள், அபூதாவூத், நஸயீ, முஸ்னது அஹ்மத்)

போர்க்களத்தில் எதிரிகளின் சூழ்ச்சியை அறிந்த இறைவன் அவர்களிடமிருந்து முஸ்லிம்களை எச்சரித்துக் காப்பாற்றுவதற்காகவே 4:102வது வசனத்தை அருளினான் என்பது வரலாறு.

''நம்பிக்கை கொண்டோரே! எச்சரிக்கையுடன் இருங்கள்! தனித்தனிக் குழுக்களாகப் புறப்படுங்கள்! அல்லது அனைவரும் சேர்ந்து புறப்படுங்கள்''. (அல்குர்ஆன், 4:71)

இதுவும், இது போன்ற வசனங்களும் எச்சிரிக்கை விடுப்பது கோழைத்தனத்தால் அல்ல, மாறாக தனியாகச் சென்று எதிரிகளிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்ற அக்கறைதான். அந்த அளவுக்கு அன்றைய நிராகரிப்பாளர்கள், முஸ்லிம்களுக்கு தொல்லைகள் வழங்கிக் கொண்டிருந்தனர்.

''உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள்'' (அல்குர்ஆன், 2:217)

முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதே அன்றைய நிராகரிப்பாளர்களின் எண்ணமாக இருந்தது, அதுவரை நிராகரிப்பாளர்கள் போர் செய்து கொண்டே இருப்பார்கள் என்று எதிரிகளின் உள்ளங்களை இறைவன் இங்கு வெளிப்படுத்துகிறான். எனவே போர்க்களத்தில் முஸ்லிம்களை நோக்கி எச்சரிப்பதும் அவர்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் நோக்கம் என்று கொள்க!

உள்ளங்களை அறியக்கூடிய இறைவன், எதிரிகளின் உள்ளங்களை அறிந்து, அதற்குத் தக்கவாறு முஸ்லிம்களை தயார்படுத்திக் கொள்ளக் கட்டளையிடுவது சர்வ வல்லமையுள்ள இறைவனின் தகுதியை எந்த விதத்திலும் குறைபடுத்தியதாகாது. போர்க்களத் தொழுகைகளில் ஒரு சாரார் இறைவனை வணங்கிக் கொண்டிருக்க, மற்றொரு சாரார் பாதுகாப்பாக ஆயுதமேந்தி நிற்பதும் காப்பாற்றும் பணியே இங்கு மேற்கொள்ளப்படுகிறது. தன்னை வணங்குபவர்களை இறைவன் காப்பாற்றிக் கொள்ள தொழுகை நிலையில் சில மாற்றங்களை செய்து கொள்ள அனுமதிக்கின்றான்.
அல்குர்ஆன், 4:102வது வசனத்தை முழுமையாக விளங்கினால், போர்க்களத்தில் முஸ்லிம்களை காப்பாற்றுவதில் இறைவனின் அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும்!

November 23, 2007 2:36 AM

sundararaj said...

நண்பர் அவர்களே,உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

நான் இறைவனை குற்றவாளி என்றோ கோளைஎன்றோ சொல்கிறேன் என தவறாக நினைக்காதீர்கள். சர்வ வல்ல இறைவனை அப்படி சொல்வதை விட சாவது மேல்.எனது கேள்வி அந்த வார்த்தை ஒரு எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தைதானா என்பது பற்றித்தான்.ஒரு வார்த்தை என்ன என்பதைவிட அதை யார் சொல்கிறார்கள் என்பதை வைத்துத்தான் அதன் மதிப்பு உள்ளது.

உதரணமாககை கால்கள் செயலற்று கட்டிலில் கிடக்கும் ஒரு வயதான தகப்பன் தன் இரண்டு மகன்களை பார்த்து. பக்கத்து தெருவில் உள்ள கிணற்றில் போய் இரண்டு குடம் தண்ணீர் கொண்டு வாருங்கள். போகும் போது பார்த்து போங்கள், அந்த தெருவில் நமக்கு எதிரிகள் உள்ளனர், கையில் ஆயுதம் கொண்டுபோங்கள், தண்ணி கோரும் போது எச்சரிக்கைகாய் இருங்கள், ஒருவன் தன்னிற் கோரினால் மற்றவன் காவல் காக்கவேண்டும் எனேற்றால் நீங்கள் குனியும் நேரத்தில் எதிரி உங்களை தாக்கலாம் என்றெல்லாம் சொன்னால் அது நீங்கள் சொல்வது போல் முற்றிலும், நியாயம்.

ஆனால் இங்குள்ள தகப்பன் அப்படிபட்டவர் அல்லபத்துபேரை ஒரே கையில் அடிக்கும் மிகப்பெரிய பயில்வான், எப்பொழுதும் அவர்சொன்ன்னத்தை செய்து முடிக்க அனேக அடியாட்கள் உண்டு. மேலும் ஒருகாலத்தில் அவர் பலபேருக்கு துணையாய் நிற்று பெரிய பெரிய பராக்கிரம செயல்களை செய்தவர். அவர் மேற்கண்டவாறு " போகும் போது பார்த்து போங்கள், அந்த தெருவில் நமக்கு எதிரிகள் உள்ளனர், கையில் ஆயுதம் கொண்டுபோங்கள், தண்ணி கோரும் போது எச்சரிக்கைகாய் இருங்கள், ஒருவன் தன்னிற் கோரினால் மற்றவன் காவல் காக்கவேண்டும் எனேற்றால் நீங்கள் குனியும் நேரத்தில் எதிரி உங்களை தாக்கி அளித்துவிடுவர்கள் என்று சொன்னால் அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்.

ஒருகாலத்தில் அவர் பயில்வான் அனால் இப்பொழுது வயதாகி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கவேண்டும் அவரோடு இருந்த அடியாட்கள் எல்லாம் அவரை விட்டு ஓடி விட்டிருக்கவேண்டும் முன்பு பலசாலியாக இன்ருந்தவர் இப்பொழுது கோளையாக மாறியிருக்கவேண்டும். அவருக்கு அவர் மகன்களை காப்பதை விட வேறு எதாவது முக்கிய வேலையிருக்கவேண்டும் (அப்படி என்றால் கூட அடியாட்களை அனுப்பலாம்) அல்லது நான் முன்பு அப்படி செய்தேன் இப்படி செய்தேன் என்பது பொய்யாக இருக்கவேண்டும்.

வேறு எதாவது காரணம் இருந்தால் சொல்லுங்கள். இதில் நான் எதை எடுத்துக்கொள்ள?

கொஞ்சம் துணிந்த தகப்பன் கூட " நீ துணிந்து போடா உன்மேல் யார் கை வைக்கிறார்கள் என்று நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றல்லவா சொல்வான்.இங்கோ இவர் எல்லாம் வல்ல இறைவன், அவர் சொன்னதை செய்ய அனேக தேவ தூதர்கள் உண்டு, ஒருகாலத்தில் மூசா நபி போன்ற நபிகளுக்கு உதவி செய்து பெரிய பெரிய காரியங்களை செய்தவர்.
இங்கு அவர் இடும் கட்டளையை நிறைவேற்றும்போது நீங்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் நான் அதற்கு எந்த விதத்திலும் பொறுப்பாளி அல்ல என்பதுபோல் சொல்வது சரியா நண்பரே.

இது ஒரு எல்லாம் வல்ல இறைவனின் வார்த்தை தானா?

November 23, 2007 9:17 PM

world contributer said... god wants us to try and be carefull, god also can protect in magic but he doesn't like that way.

dont work, sit in home food and water would come to you as if he gave to Mosus people and Mariam but god doesn't like that way he encourage us to try.
god created this world in six day but he could also creat it in one secound, he doesn't like this style, however he like he do.

what ever you ask in this religion we have clear anwser, but you have just a sculpture and a name.

November 24, 2007 3:28 AM

முஸ்லிம் said...

நண்பர் அவர்களே!
இதில் தவறாக எண்ணுவதற்கு எதுவுமில்லை. நீங்கள் எழுதிய கேள்விக்குத்தான் நாம் பதில் எழுதினோம்.

//தன்னை தொழுபவர்களைகூட அந்த நேரத்தில் காக்க திறமை இல்லாதவரா ஒரு சர்வவல்ல இறைவன்? தன்னை தொழும் போதுகூட காக்க முடியாத இறைவன் நம் வாழ்வின் மாற்ற நேரங்களில் நம்மை எப்படி பாதுகாப்பார்? சற்று விளக்கவும்.//

தன்னை தொழுபவர்களை கூட காப்பாற்ற இயலாதவன் சர்வ வல்லமையுள்ள இறைவனாக எப்படி இருக்க முடியும்? என்ற உங்களின் கேள்விக்கு, போர்க்களத்தில் தொழுகையை நிறைவேற்றும் முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காகவே அல்குர்ஆன் 4:102வது வசனம் அருளப்பட்டது என்ற வரலாறு ஆதாரங்களை எழுதினோம்.

கேள்விக்கு நேரடியான விளக்கங்கள் அந்த வசனத்தில் உள்ளது என விளக்கிய பின்னும், ''இப்படிச் சொல்வது இறைவனின் வார்த்தைகள்தானா? என உங்கள் விமர்சனம் தற்போது வேறு பாதையில் பயணிக்கிறது.

அல்குர்ஆன் முழுவதும் இறைவனின் வார்த்தைகள் என்பதில் முஸ்லிம்களிடம் அணுவளவும் சந்தேகமில்லை.

பொதுவாக, இறைவன் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று இறைவனை தமது இஷ்டத்துக்குப் படைத்துக் கொள்கிறார்களே அவர்களுக்குத்தான் இறைவன் இப்படி இருக்கக் கூடாது நான் விரும்புகிற மாதிரி இருக்க வேண்டும் என்று சொல்வது பொருந்தும்.

இறைவழியில் போரிட்டு செத்து மடிந்து போ!
பெரும்படையே வந்தாலும் துணிந்து எதிர்த்து நில்!
போரில் புறமுதுகு காட்டி ஓடாதே!
போரில் நயவஞ்சகத்தனம் செய்யாதே!
இப்படி பல வசனங்கள் இறைவனின் பாதையில் துணிந்து போர் செய்யும்படி வலியுறுத்துகிறது. சத்தியத்துக்கு மட்டும் பணிந்து நட! அசத்தியத்திற்கு பணிந்து விடாதே என்றெல்லாம் முஸ்லிம்களுக்கு இறைவசனம் அறிவரை வழங்குகிறது!

''எத்தனையோ நபிமார்களுடன் சேர்ந்து எவ்வளவோ படையினருடன் போரிட்டுள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்) துக்காக அவர்கள் தளர்ந்து விடவில்லை, பலவீனப்படவுமில்லை, பணிந்து விடவுமில்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.'' (அல்குர்ஆன், 3:146)

வரலாறு சிறப்புமிக்க பத்ருப்போரில் எதிரிகளின் படையை விட நான்கில் ஒரு பங்குதான் முஸ்லிம் படை வீரர்கள் இருந்தனர். ஆனாலும் துணிந்து போர் செய்யுங்கள் என வானவர்களைக் கொண்டு இறைவன் உதவினான்.
பத்ருப்போரில், இறைவன் வானவர்களைக் கொண்டு உதவியது போல் எல்லாப் போர்களிலும் வானவர்களைக் கொண்டு உதவினால் பிறகு மனித தியாகத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது! முஸ்லிம்கள் போரில் ஒப்புக்கு நின்று கொண்டு, வானவர்கள் போர் செய்தால் அது எப்படி முஸ்லிம்களின் தியாகமாகும்.

எனவே, சர்வ வல்லமையுள்ள இறைவனின் தனி அதிகாரத்தை நிலைநாட்டும் ஏராளமான வசனங்கள் அல்குர்ஆனில் உள்ளன. அதற்கு எந்த வகையிலும் முரண்பட்டதல்ல 4:102வது திருவசனம்.

இந்த வசனத்திலும் இறைவனின் தனித்தன்மை நிலைநாட்டப்படுகிறது. எதிரணியினர் செய்த சூழ்ச்சியை இறைவனைத் தவிர வேறு எவரும் அறிந்திருக்க முடியாது.

போர்க்களத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் மெய்மறந்து இறைவணக்கத்தில் வழக்கம் போல் ஈடுபட்டு விடக்கூடாது என்பதாலேயே அங்கு உடனடியாக தொழுகையின் நிலையை மாற்றி அமைத்துக்கொள்ள இறைவன் கட்டளையிடுகிறான். இறைவனின் இந்த கட்டளை இல்லாமல் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழக்கம் போல் தொழும் இறைவணக்கத்தை மாற்றி அமைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால் இறைவன் உடனடியாக மாற்று ஏற்பாட்டுக்கு உத்தரவிட்டு இறைச் செய்தி அனுப்புகிறான், அவன்தான் சர்வ வல்லமையுள்ள இறைவன்!

போர்க் காலங்களில் இறைவன் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வதால் அது இறைவனின் வார்த்தைகள் அல்ல என்று உங்களுக்குத் தோன்றுவது போல், அப்படி எச்சரிப்பதுதான் விவேகம் என்று முஸ்லிம்களுக்கு தோன்றுகிறது. இதுதான் நியாயமும் கூட, முஸ்லிம்களுக்கு வழிகாட்டி அல்குர்ஆன் என்பதால் எச்சரிக்கையாக இருந்து கொள்ளவும் குர்ஆன் வழிகாட்டுகிறது!

குறிப்பு: கட்டிலில் கிடக்கும் தகப்பன், கிணற்றுக்கு தண்ணீர் கோரச் சென்ற உவமை, பயில்வான் இது போன்ற உதாரணங்களெல்லாம் நீங்கள் வைத்த கேள்விக்கும், இங்கு வைத்த விளக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதால் அவைகள் கண்டுகொள்ளப்படவில்லை நன்றி!

November 24, 2007 7:12 AM

sundararaj said...

அன்பு நண்பர் அவர்களே:-ஒரு இறைவன் என்றால் இப்படி இப்படி எல்லாம் இருப்பார் என்று எல்லோருக்கும் ஒரு அபிப்ராயம் இருக்கும். அதன் அடிப்படையில் தான் அவர் இப்படிபட்டவரா இப்படி சொல்வரா என கேள்வி கேட்டேன்.

இறைவனின் வார்த்தைகள் படி நாம் நடந்தால் அவர் நம்மை எல்லா தீங்கிற்ற்கும் விலக்கி நம்மை பாதுகாப்பார் என்று நான் நினைத்தேன் அது போல பல வார்த்தைகள் நான் பைபிள் படித்தபோதும் சொல்லப்படிருந்தது.
ஆனால் இங்குள்ள வார்த்தைகள் நான் அட்வைஸ் பண்ணுவேன் நீங்கள்தான் எல்லாம் பார்த்து செய்ய வேண்டும் என்பது போல இருந்ததால் இந்த கேள்வி கேட்டேன். நீங்களும் எனக்கு அட்வைஸ் பண்ணினால் அதுவே பெரியது என்று சொல்கிறீர்கள் நல்லது.

மேலும் உங்களிடம் எதற்கும் பதில் இல்லை என நினைக்கவில்லை, இங்கு பலரிடம் கேட்ட கேள்விகளில் சரியான பதில் கிடைக்காத கேள்விகள் மட்டுமே இந்த இணையத்தளம் இருப்பதை அறிந்து கேட்கிறேன்.
உங்கள் பதிலுக்கு நன்றி.

November 25, 2007 10:41 PM

அபூ முஹை said...

This post has been removed by the author. November 26, 2007 11:39 AM

அபூ முஹை said...

அருமையான பங்களிப்புகள்!

November 26, 2007 11:48 AM

முஸ்லிம் said...

நண்பர் சுந்தரராஜ் அவர்களே நன்றி.

''அவன் செய்பவை பற்றி அவனை எவரும் கேட்க முடியாது'' (அல்குர்ஆன், 21:23)

இறைவனுக்கும் மனித குலத்துக்கும் உள்ள தொடர்பு: இறைவன், அடியார்கள் என்பதே இஸ்லாத்தின் ஏகத்துக் கொள்கையின் அடிப்படையாகும்.

மீண்டும் நன்றியுடன்.

November 26, 2007 11:52 AM

Saturday, November 17, 2007

பிஜே குர்ஆன் மொழியாக்கம்

மௌலவி பி.ஜெ அவர்கள் மொழியாக்கம் செய்த குர்ஆன் தர்ஜூமாவில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.
1. அவரது மொழியாக்கத்தில் 2:102 ல் ஹாரூத் மாரூத் இருவரையும் சைத்தான்கள் என்கிறார்.. உண்மையா.?
2. திருக்குர் ஆனில் ஸஜ்தா வரக்கூடிய வசனங்கள் மொத்தம் 4 மட்டுமே என்கிறார்..அத்தாட்சியாக உஸ்மான் ரழி அவர்களால் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ள திருக்குர்ஆனை எடுத்து வைக்கிறார்.. அந்த குர்ஆன் படிவம் இப்போது உள்ளதா..? மொத்தம் எத்தனை ஸஜ்தாக்கள்..? விளக்கவும்
mmazizurrahman(att)gmaildotcom
..........................................