வலைப்பதிவில் தேட..

Wednesday, March 19, 2008

அரசு மானியம் பெறுவது ஹராமா...?

அஸ்ஸலாமு அலைக்கும். சிறுமான்மை நலத்திற்காக அரசின் சலுகைகளை பெற பொதுவாக போராடும் நாம், அரசு தரும் மானியங்களை, கடன் உதவிகளை பெறுவது கிடையாது. யாரும் தர மறுக்கும் பட்சத்தில், சிறுமான்மையினருக்காக ஒதுக்கப்படும் அரசின் கடனுதவித் திட்டங்கள் மற்றும் மானியங்களை பெறுவது ஹராமா? நான் பல வருடங்களாக வியாபரம் செய்து முன்னுக்கு வராமல் போனதற்கு எந்த பொருளாதால உதவிகளும் கிடைக்கமால் போனதுதான். ஆனால் அரசின் பல நல்ல திட்டங்களை பெற இது ஹராமாக இருக்குமோ என்கிற அச்சத்தில் விட்டு விட்டடேன். தயவு செய்து இது குறித்து விளக்கம் அளிக்கவும். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

அன்புடன் பஃக்ருத்தீன்
Name: M.G. Fakrudeen
Location: Riyadh
Subject: Question
..............................
அரசின் நல திட்டங்கள் உட்பட பெரும்பாலும் பொருளாதார வழிகாட்டல் நம் சமுதாயத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை. வணக்க வழிபாடுகளில் பிரச்சாரகர்கள் காட்டும் ஆர்வமும் அக்கறையும் பொருளாதார வழிகாட்டலில் காட்டுவதில்லை. இதற்கு காரணம் அவர்கள் கற்றக் கல்வி முறை என்றுக் கூட கூறலாம்.

அரசின் நல திட்டங்களில் முஸ்லிம்கள் பெருமளவு பங்கேற்க வேண்டும். ஏனெனில் அரசின் மக்கள் நல திட்டங்களில் பயன்படுத்தப்படும் தொகை மக்களின் வரிப்பணமாகும்.

நம்மிடமிருந்து பெற்றத் தொகையை அரசு வேறொரு திட்டத்திற்காக நம்மிடம் வழங்கும் போது அதை புறக்கணிப்பது நமது தொகையை நாமே புறக்கணி்ப்பதற்கு சமமாகி விடும்.

இப்போதுள்ள கேள்வி, அரசின் நல திட்டங்களுக்காக அரசு வழங்கும் கடன் தொகை என்பது வட்டியை அடிப்படையாகக் கொண்டதாகும். கடன் பெற்றால் அதற்கு வட்டி செலுத்தும் நிலை ஏற்படுவதால் அரசின் நல திட்டங்களில் பங்கேற்க முடியுமா.. என்பதாகும்.

இதற்கு விடைக் காண்பதற்கு அரசி்ன் நல திட்டங்களின் விதிகள் குறித்த அறிவு நமக்கு இருக்க வேண்டும்.

அரசு தொழில் கடனுக்காக ஒதுக்கும் மானியம் என்பது நமது வரிப் பணம் என்பதை முதலில் கவனத்தில் கொள்ளும் அதே வேலை கடன் தொகை அரசால் தள்ளுப்படி செய்யும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகின்றது.

பணம் கொடுத்துப் பணம் பெறுவது வட்டி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்பதால் அரசிடம் இருந்து பணம் பெற்று அதற்கு மேதலிக பணம் கொடுப்பது வட்டி என்று அஞ்சுபவர்கள் அரசின் தொழில் மற்றும் விவசாய திட்டங்களில் பங்கேற்கலாம்.

பணமாக பெறாமல் தொழில் கருவிகளாகவோ விவசாய நிலங்களாகவோ பெறுபவர்கள் அதிலிருந்து அரசுக்கு கொடுக்கும் தொகை வட்டியில் அடங்குமா என்றால் திட்டமாக அவற்றை வட்டி என்று சொல்ல முடியாது. ஏனெனில் பணம் பொருளாக மாறும் போது அது வட்டியின் தரத்தை இழக்கின்றது.

உதாரணமாக வயலில் உழுவதற்கு ஒரு டிராக்டரை அரசிடமிருந்து பெறுபவர் அதற்காக அரசுக்கு மாதந்தோரும் ஒரு தொகை செலுத்துகிறார் என்றால் அது இஸ்லாமியப் பார்வையில் அது பொருளுக்கான வாடகையாகவோ, அல்லது லாபத்தில் குறைந்த ஒதுக்கீடாவோதான் அது அமையும்.

வட்டி என்ற பெயரில் இன்றைக்கு இருக்கும் திட்டங்கள் அனைத்தும் இஸ்லாமியப் பார்வையில் வட்டியாகுமா என்பது ஆய்வுக்குரியதாகும்.

No comments: