வலைப்பதிவில் தேட..

Thursday, July 24, 2008

நகை அணிந்து இல்லறம்

என்னுடைய கேள்வி : பெண்கள் அணியும் கழுத்துச் செயினுக்கான டாலர் மற்றும் கை விரல்களின் மோதிரம் பிரேஸ்லெட் போன்ற தங்க நகைகளில் 'அல்லாஹ்' 'லாயிலாஹ இல்லல்லாஹ்' போன்ற வாசகங்களைப் பொறித்துக்கொள்கிறார்கள். இந்த வாக்கியங்களோடு கழிவறைக்குச் செல்வது - தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கூடுமா..?

Name: Syed Gnaniyar
email: syed.isc@.....
Location: jeddah
Subject: Kelvi

பொதுவாக நகைகளில் அல்லாஹ் முஹம்மத் போன்ற வாசகங்களைப் பொரித்துக் கொள்வதற்கு எந்த தடையுமில்லை. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் தங்கள் மோதிரத்தில் அல்லாஹ் - முஹம்மத் - ரஸுல் ஆகிய வாசகங்களைப் பதித்திருந்தார்கள்.

அது அவர்களின் முத்திரை மோதிரமாக (பிற நாட்டு மன்னர்களுக்கு இஸ்லாமிய அழைப்பை வைத்து கடிதம் எழுதும் போது அந்த மோதிரத்தின் முத்திரையே கடிதத்தில் வைக்கப்படும்).

நபி(ஸல்) மோதிரம் அணியும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால் அந்த மோதிரத்தை தம் தேவையை நிறைவேற்ற செல்லும் போது (கழிவறை போன்ற இடங்களுக்கு செல்லும் போது) கழற்றி விட்டு செல்வார்கள் என்று ஹதீஸ்கள் கிடைக்கின்றன.

‏حدثنا ‏ ‏نصر بن علي ‏ ‏عن ‏ ‏أبي علي الحنفي ‏ ‏عن ‏ ‏همام ‏ ‏عن ‏ ‏ابن جريج ‏ ‏عن ‏ ‏الزهري ‏ ‏عن ‏ ‏أنس ‏ ‏قال ‏

‏كان النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏إذا دخل الخلاء ‏ ‏وضع ‏ ‏خاتمه

இந்த செய்தி பற்றிய விபரங்களுக்கு கிளிக் செய்யுங்கள்

திர்மிதி - நஸயி - அபூதாவூத் - இப்னுமாஜா - ஹாக்கிம் உட்பட இந்த செய்தி இடம் பெறுகின்றது. (அனஸ் ரலி அறிவிக்கும் இந்த செய்தியை திர்மிதி அவர்கள் சரியானது என்று கூறினாலும் பிற அனைத்து ஹதீஸ் பதிவாளர்கள், ஹதீஸ் ஆய்வாளர்களும் அந்த செய்தியை பலவீனம் என்று கூறியுள்ளார்கள். (திர்மிதி இமாமின் ஆய்வில் தவறு நிகழ்ந்துள்ளது என்று புரிந்துக் கொள்ளலாம்.)

இது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்திருந்தால் இதை அடிப்படையாகக் கொண்டு மலஜலம் கழிக்கும் போது - இல்லறத்தில் ஈடுபடும் போது நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த வாசகங்கள் பதிந்துள்ளவற்றை கழற்றி விட வேண்டும் என்று முடிவு செய்யலாம். செய்தி பலவீனமாக உள்ளதால் இதை வைத்து சட்டம் எடுக்க முடியவில்லை.

ஆனாலும் அதனால் மன ஊச்சலாட்டம் ஏற்படும் என்றால் கழற்றிக் கொள்ள வேண்டியதுதான். மன ஊச்சலாட்டங்களை விட்டு இஸ்லாம் பாதுகாப்பு தேட சொல்லியுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது மன ஊச்சலாட்டத்தை ஏற்படுத்துவது என்பதால் அதை கழற்றி வைப்பதே பாதுகாப்புக்கு சமம் என்பதால் கழற்றி விடலாம். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

No comments: