வலைப்பதிவில் தேட..

Thursday, July 24, 2008

குளிக்கும் போது

கடைமையான குளிப்பை குளிக்கும் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்ன?

Name: vaheeda
email: vaheedama@.....
Location:
Subject: Kelvi

மாதவிடாய், கணவனுடன் இல்லறத்தில் சேருதல், தூக்கத்தில் உச்சத்தை அடைதல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு குளிப்பு கடமையாகின்றது. கடமையான குளிப்பை நிறைவேற்றும் பெண்களுக்கு,

ஒளு.

குளிக்கத்துவங்குமுன் ஒளு செய்துக் கொள்ள வேண்டும்.

'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 5, எண் 248 )

'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 5, எண் 249 )

ஆரம்பமாக கைகளில் தண்ணீர் ஊற்றி கைகளை கழுவி பிறகு ஒளு செய்து, அதன் பின் தலையின் அடிப்பாகம் - அதாவது முடியின் வேர்களும் தோல் பகுதியும் - நனையும் விதத்தில் தண்ணீர் செலுத்தி விட்டு பிறகு உடம்பி்ன் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

தலைமுடியை அவிழ்க்க தேவையில்லை.

பொதுவாகவே பெண்களுக்கு தலையில் முடி அதிகமாக இருக்கும். பல பெண்கள் தலைமுடியில் கூடுதல் கவனம் செலுத்தி அதை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்த்து பாதுகாப்பார்கள். இத்தகைய பெண்கள் கடமையான குளிப்பு குளிக்கும் போது சிரமத்துக்கு ஆளாவார்கள். ஏனெனில் தலைமுடியை அவிழ்த்து அதை முழுவதும் கழுவி குளித்து காயவைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். உண்மையில் முஸ்லிம் பெண்கள் கடமையான குளிப்பை குளிக்கும் போது தலை முடி முழுவதையும் நனைக்க வேண்டுமா...? என்று பார்த்தால் இஸ்லாம் இலகுவான மார்க்கம் பெண்களுக்கு அத்தகைய கட்டளையை இடவில்லை. கீழ் வரும் ஹதீஸை பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதரே! நான் என் தலைமுடியை சடைப் போட்டு பிண்ணிக் கொள்கிறேன். கடமையான குளிப்பிற்காக அதை அவிழ்த்து விட்டு குளிக்க வேண்டுமா என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'வேண்டாம்' தண்ணீரை உன் தலையில் மூன்று முறை ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். பின்னர் உன் உடல் நனையும் படி தண்ணீரை ஊற்றிக் கொள் இவ்வாறு செய்து விட்டால் நீ சுத்தமாகி விடுவாய் என்றார்கள். (கேட்டறிந்த உம்முஸலாமா என்ற நபித்தோழியரின் இந்த அறிவிப்பு பல நூல்களில் வருகின்றது. திர்மிதி 98)

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=16&ID=19590&SearchText=اشد%20ضفر%20رأسى%20&SearchType=root&Scope=all&Offset=0&SearchLevel=QBE (இப்னுமாஜா)

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=14&ID=14134&SearchText=اشد%20ضفر%20رأسى%20&SearchType=root&Scope=all&Offset=0&SearchLevel=QBE (அபூதாவூத்)

கடமையான குளிப்பு விஷயத்தில் பெண்கள் மிகுந்த சிரத்தைக்குள்ளாக வேண்டியதில்லை. நாம் ஆரம்பத்தில் புகாரியிலிருந்து எடுத்துக் காட்டிய ஹதீஸில் "நபி(ஸல்) தண்ணீரில் கைகளை நனைத்து அதை தலையின் அடிபாகத்திற்கு செலுத்துவார்கள்" என்று வந்துள்ளது. முடிகாம்புகளும் தலையின் தோல்பகுதியும் நனையும் விதத்தில் இவ்வாறு செய்துள்ளார்கள். அதுதான் முக்கியமே தவிர முடி முழுதும் நனைய வேண்டும் என்பது சட்டமல்ல என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தீட்டு இல்லை.

குளிப்பு கடமையான பெண்கள் முடி முழுவதையும் நனைத்து - கழுவியாக வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கம் பேசுபவர்களில் பலரும் இப்படி கூறிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். குளிப்பு கடமைப்பற்றி சட்டம் கேட்கும் போதும், பெண்களே பெண்களுக்கு இது பற்றி கூறும் போதும் முடி முழுவதையும் கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். நபி(ஸல்) அவ்வாறுதான் கட்டளையிட்டுள்ளார்கள் என்பது இவர்களின் வாதம்.

இதற்காக எடுத்துக்காட்டப்படும் ஹதீஸ்.

ஒவ்வொரு முடியிலும் தொடக்கு உண்டு. அதனால் முடிகளைக் கழுவி உடம்பை சுத்தம் செய்யுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=16&ID=20016&SearchText=كل%20شعرة%20جنابة&SearchType=root&Scope=all&Offset=0&SearchLevel=QBE (இப்னுமாஜா - 589)

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=14&ID=13146&SearchText=كل%20شعرة%20جنابة&SearchType=root&Scope=all&Offset=20&SearchLevel=QBE (அபூதாவூத் - 216)

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=2&ID=2566&SearchText=كل%20شعرة%20جنابة&SearchType=root&Scope=all&Offset=20&SearchLevel=QBE (திர்மிதி - 99)

திர்மிதி - அபூதாவூத் - இப்னுமாஜா ஆகிய மூன்று நூட்களிலும் இன்னும் பல வழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் 'ஹாரிஸ் இப்னு வஜீஹ்' என்பவர் வருகிறார். அவர் பலவீனமானவர், இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கதல்ல என்று புகாரி இமாம் உட்பட பலர் கூறியுள்ளார்கள். முடியில் தொடக்கு உண்டு என்று வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை. எனவே முடி முழுவதும் நனையும் விதத்தில் குளிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமுமில்லை.

தலைப்பகுதி, முடிகாம்பு நனையும விதத்தில் குளித்தாலே போதும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

No comments: