வலைப்பதிவில் தேட..

Thursday, January 3, 2008

ஷேர்மார்க்கட் ஹராமா..?

அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் நான் வணிக மற்றும் தொழில் கல்வி பயிலும் மாணவன். (ஷேர் மார்க்கட்) பங்கு வர்த்தகத்ததிலிருந்து கிடைக்கும் பணம் ஹராமா... ஹலாலா... என்ற விளக்கம் வேண்டும்.
பங்கு சந்தை என்பது பொருளின் மீது முதலிடு செய்து பொருளின் விலைக் கூடும் போது முதலீட்டை விற்று லாபம் பெறுவதாகும்.

டைடன் கம்பெனி புதிதாக ஒரு வாட்சை அறிமுகப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் மொத்த முதலீட்டுக்கான தொகையில் பாதியை வெளியில் பங்குதாரர்களிடமிருந்து பெறுவதற்கான அறிவிப்பை வெளியிடுகிறது. நூறு பங்குதாரர்கள் இதில் சேரலாம் ஒரு பங்கின் விலை ரூ 1000 (புரிந்துக் கொள்வதற்காக குறைந்த தொகையைக் குறிப்பிட்டுள்ளோம்) என்று வகுக்கிறது.

இப்போது நூறு பங்குதாரர்கள் இந்த வியாபாரத்தில் இணைகின்றார்கள். உதாரணமாக 10 பங்குக்குரிய பணத்தை (10,000) நீங்கள் செலுத்தி பத்து பங்குதாரர் ஆகின்றீர்கள். இதேபோல் கூடுதலாகவோ - குறைவாகவோ நூறு பங்கு அந்த கம்பெனிக்கு கிடைத்து விடுகிறது. வாட்ச் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தவுடன் அதன் தரம் சிறப்பாக இருந்து நல்ல விற்பனையைக் கண்டால் அதன் மீது முதலீடு செய்த தொகை கூடுதல் லாபத்தைப் பெற்று உங்கள் பங்கின் தரம் உயரும். இந் நிலையில் உங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது அல்லது நீங்கள் இந்த பங்கு தேவையில்லை என்று முடிவு செய்தால் நீங்கள் பெற்றுள்ள 10 பங்கையும் நீங்கள் பிறருக்கு விற்பனை செய்து விடலாம். நாம் முதலீடு செய்த பொருளின் மார்க்கெட் நிலவரத்தைப் பொருத்து நம் பங்கின் மீது கூடுதல் லாபம் வைத்து விற்கலாம்.

நீங்கள் ஒரு பங்கை ரூ 1000, என்ற கணக்கில் எடுத்தீர்கள் இப்போது அதை ரூ 2000 என்று கூட நீங்கள் தீர்மானிக்கலாம். இதை தீர்மானிப்பதற்கு - அதாவது விலையை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் என்று - ஏராளமான ஏஜண்டுகள் இருக்கிறார்கள். (இவர்களில் அனேகருக்கு ஹர்ஷத் மேத்தா தான் குரு என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது)

உங்களது 10 பங்கையும் ரூ 20,000 க்கோ அல்லது கூடுதல் குறைவாகவோ நீங்கள் விற்று விட்டால் உங்களுக்கும் அந்த வியாபாரத்திற்கும் உள்ள தொடர்பு முடிந்து விடும். உங்களிடமிருந்து பங்கை வாங்கியவர் அதைத் தொடர்வார்.

தேர்தல் களம், ஆட்சி மாற்றங்கள், சர்வதேச நெருக்கடி போன்ற நிலைகள் உள்நாட்டிலோ அகில உலகிலோ ஏற்படும் போது பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்படும் அல்லது பங்கு சந்தையின் வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்கு தடைப்படும்.

தற்போது இந்தியாவின் பங்கு சந்தை நிலவரம் அவ்வளவாக சொல்லும் படியாக இல்லை என்ற தகவல்கள் வருகின்றன.

சற்று பின்னோக்கி சென்று உதாரணம் தேடினால், ரிலையன்ஸ் பட்ட பாட்டை குறிப்பிடலாம்.

அதன் தரம் ரூ 474 என்ற அளவிற்கு கீழிறங்கியது. தேர்தல் நிலவரங்களின் அறிவிப்பு வர வர கிடுகிடு என்று மேலேறி 524 ஆகியது. பின்னர் பேரங்கள் முடிந்தவுடன் 511 என்று முடிவுக்கு வந்தது.

தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் பங்கு பெரும் வீழ்ச்சி அடையும் என்று பலரும் கருதினார்கள். காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியவுடன் 'பங்குச் சந்தைக்கு வாழ்விருக்கு' என்று பலர் நிம்மதியடைந்தார்கள்.

இதுவே பங்குச் சந்தையின் நிலவரம்! எனவே இதைக் கூடாது என்று சொல்வதற்குரியய முகாந்திரங்கள் எதுவுமில்லை.

நாம் முதலீடு செய்யும் நிறுவனங்களை ஆராய்ந்து பார்த்துக் கொள்வது இறையச்சத்திற்கு உகந்ததாகும்.

நிறைய லாபத்திற்காக வாய் பிளந்து காத்திருக்காமல் பங்கின் விலை உயரும் போது நம் பங்கை விற்று விடுவதே ஷேர்மார்ககெட் சூத்திரர்களின் சூட்சுமத்தின் அடையாளமாகும். இது கூடுதல் 'அட்வைஸ்'

No comments: