வலைப்பதிவில் தேட..

Sunday, May 4, 2008

கோவிலுக்கு போகும் இமாம்

ஓர் இமாம் கோவிலுக்கு சென்று விட்டு இமாமத்தும் செய்தால் அவர் பின்னால் தொழலாமா?

Name: முஹ்யித்தீன்
email: beekayemm@....
Location: U A E
Subject: Kelvi

அதீதக் கற்பனைகளுக்கெல்லாம் விடைத்தேடிக் கொண்டிருக்கக் கூடாது. 'முஸ்லிம் சகோதரர்களைப் பற்றி தவறான சிந்தனையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். அவை பாவமாகி விடும்' என்பது குர்ஆன் நமக்கு சொல்லும் அறிவுரை.

நம்பிக்கையாளர்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள் (அல்குர்ஆன்)

பொதுவாகவே எந்த விஷயத்திலும் சந்தேகத்திற்கு இடங்கொடுக்கக் கூடாது என்றிருக்கும் போது இமாம்கள் கோவில்களுக்கு செல்வார்கள் என்ற சந்தேகம் ஏன் வருகின்றது?

கோவிலுக்கு சென்று சிலை வணக்கம் செய்யும் எவரும் பள்ளிவாசலுக்கு வந்து இமாமத் செய்ய மாட்டார்கள்.

ஒருவேளை அப்படி செய்தாலும் அவரைப் பின்பற்றித் தொழுவதால் நம்முடைய தொழுகை பாழ்பட்டுப் போகாது. இதற்கான வலுவான ஆதாரங்களை 'இணைவைக்கும் இமாமைப் பின்பற்றலாமா... என்ற கருத்துக்களத்தில் விரிவாக வைத்துள்ளோம்.

இணைவைக்கும் இமாம் கருத்துக்களம் செல்க.

No comments: