வலைப்பதிவில் தேட..

Sunday, May 4, 2008

அடிக்கடி சிறுநீர் தொந்தரவு

அடிக்கடி சிறுநீர் ஒழுகும் நபர் என்ன செய்ய வேண்டும். திரும்ப திரும்ப ஒளு செய்ய வேண்டுமா..?

Name: mussafireen
email: mussafireen@......
Location: sri lanka
Subject: Kelvi
........................

இத்தகைய பிரச்சனையுள்ள ஒருவரும் நபி(ஸல்) காலத்தில் இருந்ததில்லை என்பதால் இதற்கு நேரடியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் இந்த பிரச்சனையுள்ளவர்கள் எப்படி அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு நெருக்கமான ஆதாரம் கிடைப்பதால் அதை வைத்து இதை புரிந்துக் கொள்ளலாம்.

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 228
'அபூ ஹுபைஷ் என்பவரின் மகள் ஃபாத்திமா என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அதிகம் உதிரப்போக்குள்ள ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?' எனக் கேட்டதற்கு, 'இல்லை! அது ஒருவித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையைவிட்டு விடு; அது நின்றுவிட்டால் இரத்தம் பட்டு இடத்தைக் கழுவிவிட்டுத் தொழுகையை நிறைவேற்று' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்' என்றும் நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அவ்வப்போது சிறுநீர் சொட்டுகள் வெளியேறுவது போன்ற ஒரு நிலையில் அன்றைக்கு தொடர் இரத்தப் போக்குக்கு ஆட்பட்டப் பெண் 'தொழுகையை விட்டு விடலாமா..' என்று கேட்கும் போது, 'தொழுகையை விட அனுமதியில்லை' என்று நபி(ஸல்) விளக்கியுள்ளார்கள். இதிலிருந்து சிறுநீர் சொட்டுகள் வெளியேறுபவர்கள் தொழுகையிலிருந்து விடுபட முடியாது என்பதை விளங்கலாம்.

சிறுநீரை விட அதிக துன்பமளிக்கக் கூடிய இரத்தப்போக்குள்ளவர்கள் கூட தொழுகையை விட அனுமதியில்லை என்பதை நாம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடர் இரத்தப் போக்கைப் பற்றி குறிப்பிடும் போது 'அது நரம்பு நோய்' என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.

இயற்கைக்கு மாற்றமாக உடம்பில் நிகழும் எதுவோன்றும் நோயின் அடையாளமாகவே இருக்கும் என்பதால் அடிக்கடி சிறுநீர் சொட்டுகள் வெளியேறுவதையும் நாம் அதே அடிப்படையில் எடு்த்துக் கொள்ளலாம். மருத்துவம் செய்யும் அதே வேளையில் ஒவ்வொரு தொழுகைக்கும் அவர்கள் ஒளு செய்துக் கொள்ள வேண்டும்.

தொழுகையில் நிற்கும் போது அந்த நிலையை உணர்ந்தால் அவர்கள் தொழுகையை முறிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஏனெனில் தீர்வே இந்த பிரச்சனைக்கு சொல்லப்பட்டதுதான்.
நமது கட்டுப்பாடுகளை கடந்து நடக்கும் காரியங்களுக்கு இறைவன் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான்.

No comments: