வலைப்பதிவில் தேட..

Sunday, May 4, 2008

பிஜெ

சகோதரர் பிஜே அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். அவர் சொல்லும் சில கருத்துக்களை சில காலங்களுக்குப் பிறகு வாபஸ் வாங்கி்க் கொள்கிறார். அப்படி இருக்கும் போது தற்போது அவர் கூறும் கருத்துக்களை எவ்வாறு நம்புவது?

Name: Mohamed Yaseer
email: awm.yaseer@....
Location: Doha Qatar
Subject: kelvi

தாம் செய்யும் அல்லது தாம் கூறும் ஒரு கருத்து தவறு என்று தெளிவாகும் போது தனது முந்தையக் கருத்தை மாற்றிக் கொள்வது தான் நல்லப் பண்பு. அப்படிப்பட்டவர்களிடம் தான் நியாயமிருக்க முடியும். முதலில் ஒன்றைச் சொல்லி விட்டு பிறகு அதை மாற்றிச் சொல்வது என்பது இன்றைக்கல்ல இஸ்லாமிய அறிஞர்களின் வரலாற்றில் காலந்தோரும் நடக்கக் கூடிய ஒன்றாகும். இதில் மிக பிரபல்யமானது அறிஞர் ஷாஃபி இமாம் அவர்களின் 'கவ்ல் கதீம்' 'கவ்ல்ஜதீத்' என்றத் தொகுப்பாகும்.

தமக்கு முன்னர் கிடைத்தவற்றை வைத்து அவர்கள் வெளியிட்ட, மக்களிடம் சொன்ன கருத்துக்கள் பிறகு அதற்கு மாற்றமான ஆதாரம் கிடைக்கும் போது ஆதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது முந்தையக் கருத்தை வாபஸ் வாங்கியது என்று அவர்கள் குறிப்பிடுவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

நாம் ஒரு கருத்தை வெளியிடுகிறோம், அதற்கு மாற்றமான ஒரு தெளிவான ஆதாரம் கிடைக்கின்றது என்றால் ஆதாரத்துக்கே முதலுரிமைக் கொடுத்து நம் கருத்தை பின்னுக்குத் தள்ளி விட வேண்டும். ஆனால் சில முரட்டு அறிஞர்களிடம் இந்தப் பண்பு இருப்பதில்லை. தாம் வெளியிட்ட கருத்தை எப்படியாவது சுற்றி வளைத்து நியாயப்படுத்தத்தான் முயல்கிறார்களேத் தவிர இறைவனின் மார்க்கத்தில் நம் சுய கருத்துக்கு இடமிருக்கக் முடியாது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

தர்கா வழிபாடு, தரீக்கா வழிபாடு, தனிமனித வழிபாடு, இயக்க வழிபாடு என்று எல்லா வழிபாடுகளுக்கும் இந்த மனநிலையே காரணமாகும்.

முந்தைய கருத்தை மாற்றும் போது அக்கருத்தை நம்பியவர்களின் நிலை என்னவென்ற சிந்தனை என்றக் கேள்விக்கு பதில் மிகவும் எளிது.

முந்தையக் கருத்தும் ஒரு ஆதாரத்தின் மீதே அமைந்ததாக இருந்தால் அக்கருத்தை அன்றைக்கு ஏற்றுக் கொண்டவர்கள் சரியானதையே செய்துள்ளார்கள் என்று பொருள். அதற்கு மாற்றமான வேறொரு ஆதாரம் கிடைக்கும் போது முந்தைய ஆதாரம் தளர்த்தப்பட வேண்டும். பிடிவாதம் பிடிப்பது நம்மை வேறு திசையில் திருப்பி விடும்.

பிஜே தன் கருத்தை மாற்றிக் கொள்கிறாரா...!

சந்தோஷம் தான்

No comments: