வலைப்பதிவில் தேட..

Friday, July 18, 2008

முடிவெட்டும் தொழில்

இஸ்லாத்தில் முடிவெட்டும் தொழில் செய்பவர்களை மதிப்பதில்லையே ஏன்? அவர்கள் மோசமானவர்களா..? இவர்களைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்லியுள்ளது?

Name: b.sulaiman
email: sukasafa9@.....
Location: brunei தாருஸ்ஸலாம்

மனிதர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கும் ஆயிரக்கணக்கான தொழி்ல்களில் முடிவெட்டும் தொழிலும் ஒன்று. இது அனுமதிக்கப்பட்டத் தொழிலாகும்.

இந்தத் தொழில் செய்பவர்கள் உண்மையில் பிறரை விட ஆண்களுக்கு அதிக நன்மைச் செய்கிறார்கள். ஆம், மனிதனின் அழகைத் தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது சிகையலங்காரமாகும். பரட்டைத் தலையுடன் அல்லது காடுபோன்ற வளர்ந்த தலைமுடியுடன் உலவும் எவரும் அவர் நல்ல உடை உடுத்தி இருந்தாலும் பிறர் முகத்தை சுளித்துதான் பார்ப்பார்கள். முடிவெட்டி தலையை ஒழுங்காக வைத்திருப்பவர்கள் அடுத்தவர் பார்வைக்கு சிறந்தவராகவே தெரிவார்.

மனிதனின் சமூக மதிப்பீட்டை உயர்த்தும் தொழிலான முடிவெட்டும் தொழிலை குறைத்து பார்ப்பது, அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களை மதிக்காமல் இருப்பது அறிவீனத்தின் அடையாளமாகும்.

தினமும் நூறு முறை கண்ணாடி பார்த்து தலையை அலங்கரித்துக் கொள்பவர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு பார்பர்ஷாப் பக்கம் போகாமல் இருந்து விட்டு பிறகு கண்ணாடி பார்த்து தனது அழகை ரசிக்கட்டும் பிறகு தெரியும் அந்த தொழிலின் அருமையும் அந்த தொழிலாளியின் அருமையும்.

பொருளாதாரமே மதிப்பீடுகளை தீர்மானிக்கும் போக்கு வளர்ந்து விட்டதால் தான் முடிவெட்டும் தொழில், சலவைத்தொழில், செருப்பு தைக்கும் தொழில், - இதன் தொழிலாளிகள் பிறரால் மதிப்புடன் பார்க்கப்படுவதில்லை. காரணம் இவர்களின் தொழிலில் வருமானம் மிக மிக குறைவு. தொழிலின் பயன்பாட்டை வைத்து தொழிலாளிகள் மதிக்கப்பட்டால் மேற்குறிப்பிட்டவர்கள் முன்னணியில் நிற்பார்கள்.

இறைவன் அழகானவன் அவன் அழகை விரும்புகிறான் என்பது நபிமொழி (முஸ்லிம்) இந்த ஹதீஸ்படி பார்த்தால் அழகியலு்க்காக பாடுபடும் அனைவரும் இறைவனிடம் உயரந்தவர்கள் தான்.

மனிதன் உண்ணும் உணவிலேயே சிறந்தது அவன் கைகளால் உழைத்து உண்ணும் உணவாகும் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள் (புகாரி)
மோசடிப்பண்ணத் தெரியாத, நன்கொடை என்றப் பெயரில் லஞ்சம் பெறத் தெரியாத, பெரும் கூலிக்கு ஏற்ற தகுந்த பணியாற்றும் இவர்கள் சமுதாயத்தில் சிறந்தவர்கள். நிச்சயம் நாம் அவர்களை மதிக்க வேண்டும்.

No comments: