வலைப்பதிவில் தேட..

Friday, July 18, 2008

நன்மையுண்டா இதுக்கு?

அஸ்ஸலாமு அலைக்கும்.
மாற்று மததத்தவர்களுக்கு தானதர்மம் செய்யலாமா.. அதனால் நமக்கு நன்மையுண்டா..? மாற்றுமதத்தவர்கள் தானதர்மம் செய்தால் அதனால் அவர்களுக்கு நன்மை கிடைக்குமா..? இறைவனை ஏற்காதவர்கள் நிரந்தர நரகில் இருப்பார்கள் என்று குர்ஆனில் சொல்லி இருக்கானே... எனக்கு பதில் தேவை!
Name: haja

email: haja.faisa@....
Location: kuwait

முஸ்லிம்கள் மனிதாபிமானத்திலும், பிறர் நலன் நாடுவதிலும் எப்போதும் முன்னணியில் இருக்க வேண்டும். பசித்தவர்களுக்கு உணவளிப்பது, ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றுவது போன்றவை முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் செய்ய வேண்டியவையல்ல.

பொருளாதாரத்தை பொருத்தவரை முஸ்லிம் முஸ்லிமுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்ற எந்தக் கட்டளையையும் அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ நமக்கு இடவில்லை.

ஜகாத்தை எடுத்துக் கொள்வோம். 8 கூட்டத்தாருக்கு அவை பயன்பட வேண்டும்.

ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்) வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல் குர்ஆன் 9:60)

இந்த எட்டுக் கூட்டத்தாரில் "அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் ராணுவவீரர்" தவிர மற்ற ஏழு கூட்டத்தார்கள் பொதுவானவர்கள். அவர்கள் முஸ்லிம்களாகவும் இருக்கலாம், பிறராகவும் இருக்கலாம். தேவையை பார்த்து அவர்களுக்கு ஜகாத் தொகையை வழங்குவதில் தவறில்லை.

கஷ்டத்திலிருப்பவர்களுக்கு பொருளாதர உதவி செய்து அவர்களை அதிலிருந்து மீட்டால் அவர்கள் இஸ்லாத்தை புரிந்து அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் நிலையும் ஏற்படலாம் என்பதை ஒரு பகுதியாகவே இறைவன் ஜகாத் திட்டத்தில் வைத்துள்ளான்.

எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு நமது பொருளாதாரத்தை செலவிடக் கூடாது என்று எந்தத் தடையுமில்லை.

நாம் செய்யும் எந்த நல்லமலையும் இறைவன் வீணாக்கி விடமாட்டான் என்று குர்ஆனில் இறைவன் குறிப்பிட்டு காட்டுவதால் பகட்டுக்காக இல்லாமல் இறை திருப்தியை நாடி நாம் முஸ்லிமல்லாதவர்களுக்கு நமது பொருளாதாரத்தை செலவழிக்கலாம்.

தேவையிருந்தும் செலவு செய்யதவர்களுக்குரிய எச்சரிக்கையும் குர்ஆனில் உள்ளது.

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான். (அல்குர்ஆன் 63:10)

தேவை இருந்தும் தான தர்மம் செய்யாமல் கைகளை இறுக்கிக் கொள்பவர்களின் மரணத் தருவாயின் புலம்பலை இறைவன் முன் கூட்டியே சுட்டிக் காட்டுகிறான். ஆனால் அந்த புலம்பலால் எந்தப் பலனும் இல்லை.
பிற மதத்தவர்கள் தான தர்மம் செய்கின்றார்கள் அதற்கு பலனுண்டா என்று கேட்டுள்ளீர்கள்.

இஸ்லாத்தைப் பொருத்தவரை ஓரிறைக் கொள்கையைத் தழுவிதான் மற்ற அனைத்து நற்பணிகளும் தீர்மானிக்கப்பட்டுளளன. ஓரிரைக் கொள்கையை ஏற்காத நிலையில் செய்யப்படும் நற்பணிகளுக்கு இஸ்லாத்தில் மதிப்பில்லை.

பிறராக முன் வந்து இஸ்லாமிய நற்பணிகளுக்கு உதவினால் அந்த உதவியை புறக்கணிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் சொல்லவில்லை. அது அவர்களின் விருப்பத்தை சார்ந்ததாகும்.

No comments: