வலைப்பதிவில் தேட..

Sunday, April 19, 2009

நமக்குள் இஸ்லாம் மனிதன், ஜின், ஷைத்தான்


from: Abufawzeema Date: 2009/3/29
To: நமக்குள் இஸ்லாம் <fromgn@googlegroups.com>


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

முக்கியமான கேள்வி!

ஷைத்தான்கள் பற்றியது.

மனிதன், ஜின், ஷைத்தான் ஆகியவை மூன்று வேறுபட்ட படைப்பினங்களா?  ஷைத்தான் ஜின்னினத்திலும் மனித இனத்திலும் நின்றும் உள்ளவனா?  அல்லாஹ்வுக்கு மாறு செய்த "இபுலீஸ்" என்பவன் ஜின்னினத்தைச் சேர்ந்த்தவன். முன்றாவதொரு படைப்பாக ஷைத்தான்கள் படைக்கப்பட்டு இபுலீஸின் தலைமையில் அவர்கள் இயங்கச் செய்யப்படுகிறார்களா?

தெரிந்தவர்கள் குர்- ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்குங்கள். அல்லாஹ்
உங்களுக்கு ரஹ்மத் செய்வான்.

வஸ்ஸலாம்
----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2009/4/9
To: fromgn@googlegroups.com


ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
 
ஷெய்த்தான் - இப்லீஸ் என்பது ஜின் இனத்தை மூலமாகக் கொண்டதாகும். ஜின் இனத்தை சார்ந்து தனது செயல்களின் காரணங்களால் ஷெய்த்தான் மற்றும் இப்லீஸ் உட்பட பல பெயர்களை பெற்றுக் கொண்டது. 
 
كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ
இப்லீஸ் ஜின் இனத்தை சார்ந்தவனாக இருந்தான். தனது ரப்புவின் கட்டளையை மீறி விட்டான். (அல்குர்ஆன் 18:50)
 
ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும். அப்படிப் படைக்கப்பட்டதாலேயே ஷெய்த்தான் 'படைபால் உயர்ந்தவன்" என்று கர்வம் கொண்டான்.
 
قَالَ أَنَاْ خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ
நான் அவரை (ஆதமை) விட சிறந்தவன். நீ என்னை நெருப்பினால் படைத்தாய். (அல் குர்ஆன் 7:12)
 
ஷெய்த்தான் என்பது ஷ(த்)தன என்ற மூல சொல்லில் இருந்து பிறந்ததாகும்.   இதற்கு "தொலைவில் உள்ளது" என்று பொருள்.  அவன் தனது மாறுபாட்டின் காரணத்தால் எல்லா நன்மைகளையும் விட்டு தூரமாகிப் போய்விட்டதால் அந்தப் பெயர் வந்தது என்ற கூற்று ஏற்புடையதாகும்.
 
திருக்குர்ஆனில் ஷெய்த்தான் பற்றி எச்சரிக்கப்பட்ட இடங்களை நாம் நோக்கும் போது "நன்மையைவிட்டு தூரமாக்கப்படும் செயல்களே சுட்டிக் காட்டப்பட்டு வந்துள்ளன" என்பதை கவனிக்கும் போது அந்தப் பெயருக்கான காரணத்தை நம்மால் விளங்க முடிகின்றது.
 
 إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لاَ تَرَوْنَهُمْ
 
(ஷெய்தானாகிய) அவனும் அவனது வம்சாவழிகளும், கூட்டத்தாரும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு. (அல்குர்ஆன் 7:27)
 
எல்லாவித நன்மையை விட்டும் தூரமாகிப் போன ஷைத்தான்களின் தந்தையாகத்தான் இப்லீஸ் இருந்துள்ளான் என்பதை இன்னொரு வசனத்திலிருந்து விளங்கலாம்.
 
ஷைத்தான்களைப் பற்றி தொடர்ச்சியாக எச்சரிக்கும் ரப்புல் ஆலமீன்,  ஆதமுக்கு கட்டுப்பட்டு நடக்காததை பற்றிக் கேட்கும் போது "இப்லீஸ்" என்று அழைத்தே கேட்கிறான்.
 
قَالَ يَا إِبْلِيسُ مَا لَكَ أَلاَّ تَكُونَ مَعَ السَّاجِدِينَ
 
இப்லீஸே! ஸஜ்தா செய்தவர்களுடன் நீ இணையாமல் இருந்ததின் காரணம் என்ன? என்று (இறைவன்) கேட்டான் (அல்குர்ஆன் 15:32)
 
இந்த இப்லீஸின் சேனைகளாக இயங்கும் ஷெய்த்தான்களே உலகில் பல பயங்கர விளைவுகளை - இறைநம்பிக்கையாளர்களுக்கு தொடர் தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  கடைசியில் அவர்கள் சேரும் இடம் நரகம்
 
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
 
இப்லீஸின் சேனைகள் நரகத்தில் தள்ளப்படும். (அல்குர்ஆன் 26:95)
 
மனித மனங்களில் குழப்பதை ஏற்படுத்துவதும், கணவன் மனைவிகளுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி விளையாடுவதும்,  இணைவைப்பு என்ற பலதெய்வக் கொள்கையை, நம்பிக்கையை மனிதர்களிடம் ஆழமாக வேறூன்றச் செய்வதும் இப்லீஸ் மற்றும் அவனது படைபலமான ஷெய்த்தான்களின் பிரதான பணியாகும்.
 
தண்ணீரின் மீது இப்லீஸின் சிம்மாசனம் உள்ளது.  அவன் தினமும் பல திக்குகளிலும் தனது சேனையை அனுப்பி குழப்பம் விளைவிப்பான் அதில் அவனுக்கு மிக விருப்பமானது கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஊட்டுவதாகும் என்றெல்லாம் பல நபிமொழிகள் நமக்கு விளக்குகின்றன.
 
மனித மனங்களில் குழப்பங்களை விளைவிக்கும் அந்த பாரதூர செயலை செய்யக் கூடியவர்கள் மனிதர்களாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் ஷெய்த்தானிய செயலை ஒத்திருப்பதால் அவர்களையும் ஷெய்த்தான் என்று குர்ஆன் அடையாளப்படுத்துகின்றது.
 
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
 
மனித மனங்களில் வீணான - வஸ்வஸான - எண்ணங்களை உருவாக்கும் ஷெய்த்தான்கள் ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 114:6)
 
ஹாருத் - மாருத் என்ற இரு மனித ஷெய்த்தான்கள் மக்களிடம் சூனியத்தை பரப்பி குழப்பம் விளைவித்ததையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளலாம்.  (அல்குர்ஆன் 2:102)
 
(இறைவன் அனைத்தையும் நுணுக்கமாக அறிந்தவன் என்று நம்புகிறோம்)

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com

தமிழ் யுனிகோட் டவுன்லோட்
http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe

No comments: