நான் பொதக்குடி என்ற ஊரை சேர்ந்தவன். என்னுடைய கேள்வி, எங்கள் ஊரில் உள்ள மையவாடி முகப்பில் தமிழில் 'முஃமின்களின் பூங்கா' என்று எழுதப்பட்டுள்ளது. மையவாடியில் அடக்கப்படுபவர்களை முஃமின்கள் என்று நாம் அழைக்கலாமா..? எங்க ஊரில் எல்லாம்??? தெரிந்த மத்ஹப் ஷேக் உள்ளார். அவரின் உத்தரவின் பேரில் இது செய்யப்படுகின்றது. இது சம்மந்தமாக விளக்கம் தேவை.
பொதக்குடி சலீம் (ஜித்தா)
nhsaleemஅட்gmailடாட்com
..................................................
படிப்பாளி said...
பொது மையவாடிக்கு பெயர் வைப்பதெல்லாம் ஒரு பிரசசனையல்ல. மதீனாவில் உள்ள பொது மையவாடிக்கு நபி(ஸலல்) காலத்திலிருந்தே 'ஜன்னத்துல் பகி' என்று பெயருள்ளது. அது மாற்றப்படவில்லை.பொது மையவாடியில் அடக்கப்பட்டுள்ளவர்களை முஃமின்கள் என்று குறிப்பிடுவதும் தவறாக தெரியவில்லை. ஏனெனில் பொதுக் கப்ரஸ்தான்களுக்கு நாம் செல்லும் போது அவர்களுக்குக்காக பிரார்த்திக்கும் அந்த பிரார்த்தனையில்
'عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة فقال السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون
'முஃமினான மண்ணறைவாசிகளே...உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.. என்று மண்ணறைவாசிகளை பொதுவாக முஃமின் என்று சுட்டிக் காட்டியுள்ளதால் முஃமின்களின் பொதுமையவாடி என்று குறிப்பிடுவது தவறல்ல என்று விளங்கலாம்................
January 17, 2008 10:02 PM
Showing posts with label இறந்தவர். Show all posts
Showing posts with label இறந்தவர். Show all posts
Monday, January 14, 2008
பொது மையவாடிக்கு பெயர்?
Subscribe to:
Posts (Atom)