வலைப்பதிவில் தேட..

Tuesday, December 25, 2007

நிறுவனத்தில் கணக்கெழுதும் போது..

நான் எம் காம் முடித்து விட்டு வேலை தேடி கொண்டு இருக்கிறேன். அனைத்து நிறுவனங்களும் தனது இருப்புத்தொதையை வங்கியில் தான் இட்டு வைத்திருக்கின்றன. அப்படி இருக்கையில் வங்கியிடமிருந்து பெரும் வட்டி பணத்தை கணக்கில் எழுதுவது இன்றியமையாத ஒன்று. எனது கேள்வி என்னெவெனில் நான் ஒரு நிறுவனத்தில் கணக்கராக பணி புரியும்போது வங்கியிடமிருந்து பெரும் வட்டி பணத்தை கணக்கில் எழுதியே தீரவேண்டும். இது மார்க்கத்தில் கூடுமா ?கூடாதா?. விளக்கம் தரவும்.
skn_azeesudeenatyahoodotcom
வட்டிக்குத் துணைப் போகக் கூடாது என்ற எண்ணத்தில் நீ்ங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறோம். இறைவன் உங்களின் இஸ்லாமிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தட்டும்.
வட்டிக்கு துணை போகுதல் என்பதை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.
1) நாம் விரும்பி வட்டியின் வளர்ச்சிக்கு துணை புரிதல்.
  • வங்கியில் முதலீடு, வங்கியில் வேலை, வட்டிக்கடை நடத்துதல், வட்டிக்கடையில் வேலைப் பார்த்தல், கந்து வட்டிச் சிந்தனை என்று இதை பலவாறாக குறிப்பிடலாம்.

2) சிறு சிறு பிரச்சனைகளுக்குக் கூட வட்டிக் கடையை - வங்கியை நோக்கி ஓடி தன் தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள முயலுதல்.

  • சற்று முயற்சித்து அல்லது கொஞ்சம் பொருமையாக இருந்து பிரச்சனையை சரி செய்துவிட முடியும் என்ற நிலை இருந்தும் அவசர உலகத்தை விட அவசரமாக தன் நிலையை மாற்றிக் கொள்பவர்களால் வட்டி வளர்கின்றது.

இந்த இரண்டு நிலைக்கு உட்படாத எதுவும் வட்டிக்கு துணைப் போகுதல் என்ற நிலையைப் பெறுவதாக நமக்குப் புலப்படவில்லை.

உலக அளவில் பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் முதல் தேசிய - மாநில சிறு நிறுவனங்கள் வரை உள்ள கோடான கோடி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், வணிக மையங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் என்று அனைத்து இயக்கமும் வங்கியுடன் தொடர்புள்ளதுதான். வங்கியில் முதலீடு அல்லது வைப்புத் தொகையும் வங்கியிலிருந்து எடுக்கப்படும் தொகையும் அந்தந்த நிறுவனங்களில் கணக்கெழுதப்படுகின்றன.

இப்படி எழுதப்படும் கணக்குகள் அந்தந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்காக இருக்குமே தவிர வட்டிக் கணக்கு எழுதுவதாக ஒரு போதும் ஆகாது.

வங்கியில் தொடர்புள்ள நிறுவனங்களில் பணிபுரிந்து கணக்கெழுதுவதெல்லாம் வட்டிக்கு துணை போகும் என்று யாராவது கருதினால் 'கணக்கியல்' கல்வியிலிருந்து முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்த வேண்டி வரும். ஏனெனில் கணக்கியல் கல்வி என்பது வங்கியின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ தொடர்புள்ளதாகவே இருக்கும்.

இப்படி ஒரு விதியை இஸ்லாம் விதிக்கவில்லை. இஸ்லாமிய பொருளாதார சிந்தனையும் - வட்டிப்பற்றிய ஒரு பரந்த ஆய்வும் தமிழக முஸ்லிம்களிடம் இல்லாததுதான் இத்தகைய சந்தேகங்களுக்கு வழி வகுக்கின்றது.

வட்டியுடன் நமக்கு நேரடியான தொடர்பு இல்லாத நிலையில் நாம் எழுதும் எந்த கணக்கும் வட்டிக் கணக்காக ஆகாது. 'வட்டிக்கு எழுதுபவரை நபி(ஸல்) சபித்துள்ளார்கள் என்ற சபிப்பில் இந்த கணக்கர் அடங்க மாட்டார்.

Wednesday, December 5, 2007

பெண்கள் பிரச்சனை

பெண்கள் தங்களின் தொழுகையின்போது இயற்கை உபாதையான வெள்ளைப் படுதல் மற்றும் காற்றுப்பிரிதல் போன்ற சம்பவங்களால் தொழுகையை நிறைவேற்ற முடியாமல் போகிறதே.. என்ன செய்வது..? இது ஏராளமான பெண்களுக்குரிய பிரச்சனை. தாஹிரா - அபுதாபி