வலைப்பதிவில் தேட..

Tuesday, June 10, 2008

யாருக்கு சொத்து?

நான் இறந்த பின் எனது சொத்துக்களை (வங்கி இருப்பு, சொத்துக்கள், மரணக்காப்பீடு) இது போன்றவற்றை நான் என் மனைவிக்கும் என் சகோதரிக்கும் கொடுக்கலாமா? எவ்வாறு செய்வது? சிலர் கூறுகிறார்கள் இஸ்லாத்தில் இது அனுமதியில்லையென்று. நான் அவற்றை ஒருவருக்கே கொடுக்க மணமில்லை. தங்களிடமிருந்து தெளிவான பதில் தேவை.

Name: Mohamed Ibrahim
email:
ibrm@.....
Location: Dubai
.....................................

எந்த ஒரு முஸ்லிமும் தான் இறந்த பிறகு தனது சொத்தை இந்த வகையில் பிரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்ல முடியாது. சொத்துக்கு யாரெல்லாம் வாரிசுதாரர்களாவார்களோ அவர்களையும் அவர்களுக்குரிய அளவையும் இறைவன் தெளிவாக பட்டியலிட்டு விட்டதால் அவர்களுக்கு நாம் உயில் எழுதி வைக்க முடியாது. எழுதி வைத்தாலும் இஸ்லாமிய நீதிமன்றங்களில் அவை செல்லாது.
ஒருவர் இறந்த பின் அவரது வாரிசுதாரர்கள் யார் யார் என்பதை குர்ஆன் அடிப்படையில் நீதிமன்றம் அணுகி அவர்களுக்கு பிரித்துக் கொடுக்கும். (அதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால்).
பாகப்பிரிவினைப் பற்றிய வசனங்களைப் படியுங்கள்.
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிரைவேற்றிய பின்னர்தான்;. உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்;. ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்:4:11)
இறந்துப் போனவர் விட்டு சென்றது என்று இறைவன் சுட்டிக் காட்டுவதை நாம் கவனிக்க வேண்டும். விட்டு செல்லக் கூடிய சொத்து எதுவாக இருந்தாலும் - நிலங்கள், பத்திரங்கள், வீடுகள், வருமானம் வரும் பிற கட்டிடங்கள், வங்கி வைப்புகள் உட்பட - அனைத்துக்கும் இறைவன் மேலே குறிப்பிட்டுள்ள அவர்கள் வாரிசுதாரராகி விடுவார்கள்.
இவர்களல்லாத பிறருக்கு வேண்டுமானால் 'மரணசாசனம்' எழுதி செல்லலாம். உண்மையில் உங்கள் சொத்தை பிறருக்கு ஓரளவு கொடுக்க வேண்டு்ம் என்று நீங்கள் விரும்பினால் அதை நீங்கள் உயிருடன் இருக்கும் போதே எழுதி அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். அதாவது அது அவர்களின் சொத்தாகி விட வேண்டும்.
விபரம் போதவில்லையென்றால் எழுதுங்கள்.

வங்கி - எதிரி

வங்கி - வட்டி - எதிரி

முஸ்லிம்களை கருவறுப்பதற்கும் - முஸ்லிம் பெண்களை எழுத கூசும் விதத்தில் படு கேவலமாக மானப்பங்கப்படுத்தி கொலை செய்வதற்கும் வங்கி வட்டி பணம் தான் பயன்படுத்தபடுகிறது என்பதற்கு ஏதாவது தகுந்த ஆதாரம் உண்டா? நம்முடைய மக்களுக்கு புரியவைப்பதற்காக இதைவிளக்கவும் விளக்கவும்....

Name: Thajudeen
email: m.thajudeen@....
Location: Dubai
Subject: Question

சின்ன - பெரிய ஷிர்க்

எனது கேள்வி.
சின்ன ஷிர்க் என்றால் என்ன? பெரிய ஷிர்க் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

Name: ansar a rahman
email:
abdul.ansar@......
Location: sri lankan
Subject: Kelvi

இணைவைப்பு என்ற ரூபத்தில் வந்தாலும் அது கொடியதாகும். இணைவைப்பு குறித்து முஸ்லிம்கள் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடனும், அதன் விளைவுகள் குறித்த அறிவு - பயத்துடனும் இருக்க வேண்டும்.

பெரிய இணைவைப்பு.

பகிரங்கமாக, வெளிப்படையாக, அறிந்தோ அறியாமலோ செய்யும் சில காரியங்கள்.
இறைவனைத் தவிர பிற அவனது படைப்புகளை அல்லது இறைவனுடன் அவனது படைப்புகளை வழிபாட்டுக்குரியதாக - வணக்கத்துக்குரியதாக ஆக்கிக் கொள்வது.
மனிதர்கள் (அது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களாக இருந்தாலும் சரியே).
வானவர்கள் (மலக்குகள்),
ஜின்கள், (தேவதைகள்)
சிலைகள் (அது கடவுள் என்ற அர்த்தத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் சரி, மரியாதைக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் சரி)
மிருகங்கள், பசு வழிபாடு போன்றவை
இடங்கள் (பூமியின் பல்வேறு இடங்கள் புனிதமாக கருதப்படுவது - பூமித்தாய் என்று போற்றி அதை வணங்குவது)
மனிதப்படைப்புகள் (ஆயுதபூஜை போன்றவை)
சமாதிகள், தர்காக்கள், மடங்கள்

இப்படி வெளிப்படையாக வழிபடப்படும் அனைத்தும் 'பெரிய இணைவைப்பு' என்ற கொடிய செயலில் அடங்கி விடும். இது 'லாஇலாஹ இல்லல்லாஹ்' 'வணக்கத்துக்குரியவன் ஏகனைத் தவிர வேறொன்றும் இல்லை' என்ற இஸ்லாத்தின் ஆணிவேரான கொள்கைக்கு முற்றிலும் மாற்றமானதாகும். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் இந்த கொடிய செயலுக்கு எதிராகவே தனது முதல் பிரச்சாரத்தை துவக்கினார்கள். இந்த இணைவைப்பு குறித்து போதுமான விளக்கங்கள் பல வழிகளில் மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டு வருகின்றன.

சிறிய இணைவைப்பு

முஸ்லிம்கள் அதிகமாக அஞ்சி தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் செயலாகும். அரபியில் 'ரியா' என்று குறிப்பிடப்படும் சிறிய இணைவைப்பு குறித்து நபி(ஸல்) மிகுந்த எச்சரிக்கையுணர்வை ஊட்டி சென்றுள்ளார்கள்.

எங்கள் மத்தியில் இறைவனின் தூதர் அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, அவர்கள் 'மறைவான இணைவைப்பு குறித்து அச்சம் கொள்ளுங்கள். ஏனெனில் அது எறும்பு ஊர்ந்து செல்வதை விட கண்ணுக்கு புலப்படாத வகையில் அமைந்துள்ளது" என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (எழுந்து) 'அல்லாஹ்வின் தூதரே, எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைவாக இருக்கும் அதனை நாங்கள் எப்படி தவிர்த்துக் கொள்ள முடியும்?" என்று வினவினார்கள். அப்போது நபி அவர்கள், 'அல்லாஹ்வே! நாங்கள் அறியாது செய்யும் இணைவைப்பிலிருந்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்" என்று (பிரார்த்தனை செய் என்று) சொன்னார்கள். அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அஹ்மத்.

'அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார். என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள்.அபூதாவூத், இப்னு மாஜா.

'நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தெரிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்கரித்துக் கொள்கிறார்." என்று கூறினார்கள். அபூஸயீத்(ரலி) இப்னுமாஜா.

அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் விரும்பியதை நாம் விரும்பியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவருக்காக நரகத்தைத் தயார்படுத்துவோம். இழிந்தவராகவும் அருளுக்கு அப்பாற்பட்டவராகவும் அதில் அவர் நுழைவார்.

நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு, கூலி கொடுக்கப்படும்। அல்குர்ஆன் 17:18-19

உங்களில் அழகிய செயலுக்குாியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தோன், மன்னிப்போன். (திருக்குர்ஆன் 67:2)

பேருக்காக, புகழுக்காக, பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக, இன்னபிற உலக அற்ப நோக்கங்களுக்காக செய்யப்படும் எந்த காரியமும் - அமலும் - சிறிய இணைவைப்பு என்ற அந்த பாவத்தை ஏற்படுத்தி விடும்.

முஸ்லிமின் நோக்கம் மறுமையாக இருக்க வேண்டும். உலகின் எந்த நோக்கத்தையும் பிரதானமாக கருதாமல் மறுமைக்காக வாழும் வாழ்க்கை ஒன்றே சிறிய இணைவைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

இறைவன் நம் எண்ணங்களை தூய்மையாக்கி வைப்பானாக.

மதுவும் - வட்டியும்

1. என்னுடைய முதலாளி வட்டி வாங்குகிறர் நான் அவரிடம் வேலை செய்யலாமா? மற்றும் அவர் இன்னும் பிற தவறான செயல்களை செய்கின்றர்கள் என்று உடன் வேலை செய்பவர்கள் கூறுகிறர்கள் அதனை ஈர்ர்கலாமா?

2. என்னுடன் வேலை செய்பவர்கள் அனைவரும் ஒர் வீட்டில் இருந்து வருகிறோம். வேலை செய்யும் நபர்கள் மது அருந்தும் வழுக்கம் உள்ளவர்கள் மாதத்தின் கடைசியில் அந்த தேவைக்காக பணம் கேட்கிறார்கள் கொடுக்கலாமா? இந்த இரண்டு கேள்வி பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Name: Thahir
email:
thahirmd53...
Location: India
Subject: Kelvi
...........................


வட்டிக்கடை நடத்துபவராக இருந்தால் நீங்கள் பிற வேலையைத் தேடிக் கொள்வதுதான் நல்லது. ஏனெனில் வட்டிக்கு எதிரான கடுமையான எச்சரிக்கைகள் இருப்பதால் அந்தப்பக்கத்தை விட்டு நாம் ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது. வட்டி வாங்குபவர் என்பதை எந்த அர்த்தத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று புரியவில்லை. வங்கியில் கணக்கு வைத்துள்ள அநேகர் கூட வட்டி வாங்கத்தான் செய்கிறார்கள். அந்த அர்த்தத்தில் குறிப்பிட்டால் இன்றைக்கு உலகில் பெரும்பாலான இடங்களில் - நாடுகளில் -வேலை செய்யவே முடியாது ஏனெனில் அனைத்து தொழில் நிறுவனங்களும் வங்கியோடு தொடர்பில் தான் இருக்கின்றன.

வங்கியோடு தொடர்பில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்யலாமா என்றால் இது குறித்து ஏற்கனவே விளக்கியுள்ளோம். அத்தகைய இடங்களில் வேலை செய்வதால் நாம் குற்றவாளியாக மாட்டோம்.

உங்கள் முதலாளி தவறான செயல் செய்கிறார் என்று பிறர் கூறுவதை அலட்சியப்படுத்துங்கள். நீங்கள் நேரடியாக காணும் வரை பிற செய்திகளை முழுமையாக அலசி தெளிவு பெறாதவரை யாரைப் பற்றியும் தப்பெண்ணம் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில தவறான எண்ணங்கள் பாவமாகி விடும் என்று குர்ஆன் எச்சரிக்கின்றது.

உடனிருப்பவர்கள் ஹராமான காரியத்தை செய்வதற்கு உங்கள் உதவியை நாடினால் - பணம் மட்டுமல்ல கடையில் போய் மது வாங்கி வர சொன்னாலும் - அதற்கு உடன்படாதீர்கள்.

முஸ்லிம்கள் தீமைகளை பலவழிகளில் தடுக்கக்கடமைப்பட்டவர்கள். தடுக்க முடியாத பலவீனமான நிலை நம்மிடம் இருந்தால் குறைந்த பட்சம் உதவி செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள், பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் (அல்குர்ஆன்: 5:2)

உடனிருப்பவர்களிடம் நளினமாக 'தனக்கு இதில் உடன்பாடில்லை, என் மார்க்கம் இதை தடுக்கின்றது" என்று கூறிவிடுங்கள். உடனிருப்பதால் அவர்களால் உங்கள் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடியும். இறைவனின் உதவியை நாடுங்கள். பாவத்துக்கு துணைப் போக வேண்டாம்.