வலைப்பதிவில் தேட..

Thursday, January 31, 2008

ஆன்மீக உறுதிமொழி (பைஅத்) பிறரிடம் எடுக்கலாமா..?

பையத் என்றால் என்ன? சில சகோதரர்கள் மற்ற சிலருக்கு பையத் கொடுக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள் நாம் வலியுல்லா, சூபி, தேவதைகள் (Angels)...ஆகியோர்களை பின்பற்றவேண்டும் என்று. இதற்கு தங்களது பதில் தேவை. பிளீஸ்...

Name: Mohamed Salman
email: salman.mhmd@yahoo.co.in
Location: Chennai
Subject: Question

பைஅத் என்ற அரபு பதத்திற்கு உடன்படிக்கை என்றுப் பொருள். இந்த உடன்படிக்கையை நாம் இரண்டு விதமாக பிரிக்கலாம்.

ஒன்று உலகத்திற்கான, உலகம் சார்ந்த உடன்படிக்கை.
மற்றொன்று இறைவனுக்கான, ஆன்மீகம் சார்ந்த உடன்படிக்கை.

நீங்கள் ஆன்மீக உடன்படிக்கை (பைஅத்) பற்றிக் கேட்டுள்ளீர்கள். ஆன்மீக உடன்படிக்கையை இன்று யாரும் யாரிடமும் செய்ய முடியாது, செய்யக் கூடாது. இது பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

இறைவனின் சட்டதிட்டங்களை கடைபிடிக்கும் விஷயத்தில், அவனைப் பற்றி சிந்திக்கும் விஷயத்தில், அவனை புரிந்துக் கொள்ளும் விஷயத்தில் மனிதர்களுக்கு - முஸ்லிம்களுக்கு - மத்தியில் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு காரணம் மனித அறிவின் பலவீனங்களேயாகும். எல்லா மனிதர்களும் சமமான அறிவுள்ளவர்களாகத்தான் படைக்கப் படுகிறார்கள். அதை பயன்படுத்தும் முறையை பொருத்து, பக்குவப்படுத்தும் முறையை பொருத்து மனிதர்கள் பெரும் வேறுபாட்டை அடைகிறார்கள் என்பதை நாம் கண்டு அனுபவித்து வருகிறோம். இந்த வேறுபாடுகளை அவர்கள் கற்கும் கல்வி, கிடைக்கும் அனுபவம், இருக்கும் சூழ்நிலை, சுற்றி வாழும் சமூகங்கள் ஆகியவையே தீர்மானிக்கின்றன.

இறைவனையும், இறைத்தூதர்களையும், இஸ்லாத்தையும் புரிந்துக் கொள்ளும் விஷயத்திலும் மனிதர்களுக்கு மத்தியில் பாகுபாடு நிலவுவதற்கு நாம் மேலே குறிப்பிட்டவையே காரணங்களாகும். இந்த சாதாரண விஷயத்தை விளங்க முடியாதவர்கள் தான் முரீது என்ற அத்வைத கோட்பாட்டில் தன் ஈமானை இழந்து நிர்ப்பவர்கள்.

பாதை தெரியாமல் பயணிக்கும் தளமாகவே இந்த உலக வாழ்க்கையுள்ளது. மனிதன் சுயமாக சிந்தித்து விளங்க முடியாத பெருத்த இடற்பாடுகளும் குறுக்கீடுகளும் இந்த தளத்தில் உள்ளன. எனவே அவனை வழி நடத்தவும் போய் சேரக்கூடிய இலக்கை அறிவித்துக் காட்டவுமே இறைவன் புறத்திலிருந்து வேதங்கள் வந்தன. அதன் படி வாழ்ந்துக் காட்டவும் வழி நடத்தவும் தான் இறைத்தூதர்கள் வந்தார்கள். இறைவனை விளங்கி புரிந்துக் கொள்வதற்குறிய சரியான அளவு கோலை நம்மைப் போன்ற மனிதர்களாக இருந்த இறைத்தூதர்களிடமிருந்துதான் பெற முடியும். அவர்களல்லாத வேறு வழியில் பெறுவதற்கு எந்த வித சாத்தியக் கூறும் இல்லை.

அந்த இறைத் தூதர்களில் யாருமே,

நாங்கள் இறைவனைக் காட்டுகிறோம் என்று கூறவில்லை.

இறைவனும் மனிதனும் இரண்டற கலந்து விட முடியும் என்று கூறவில்லை

இறைவனுக்கும் எங்களுக்கும் அந்தரங்க தொடர்பு உண்டு என்றுக் கூறவில்லை.

நாங்கள் இறைத் தூதர்கள் என்பதால் நீங்களும் நாங்களும் வேறுபட்டவர்கள் என்று குரு - சீடர்கள் முறையை உருவாக்கவில்லை.

ஆனால், முரீது கொடுக்கிறோம் என்று புறப்பட்டு மிக சொற்ப மனித மனங்களை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் ஷேக்குகள் இவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ரகசிய ஞானம் என்று ஒன்று இஸ்லாத்தில் உண்டு என்றுக் கூறுவது, இறைவனுக்கும், அவன் வேதத்திற்கும், இறைத்தூதர்களுக்கும் எதிராக செய்யக் கூடிய பெரும் அநீதியாகும்.

மக்களுக்கு தெளிவான வழி காட்டுவதற்காகவும், அவர்கள் எளிதாக புரிந்துக் கொள்வதற்காகவும் இந்த குர்ஆன் இறக்கப்பட்டதாக தன் வேதத்தில் பல இடங்களில் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.

பாதுகாக்கப்பட்ட நபிமொழிகளில் இறைத்தூதரின் வாழ்க்கை முறை திறந்த புத்தகமாக இருக்கிறது. இவை இரண்டிலும் இல்லாத - சொல்லப்படாத - ரகசிய ஞானத்தை இந்த ஷேக்குகள் எங்கிருந்து கற்றனர்?

ஞானம் பெறுவதற்காக பைஅத் கொடுக்கிறேன் என்பதெல்லாம் பெரும் மோசடியாகும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருந்தால் அந்த நாட்டுக் குடி மக்கள் அந்த ஆட்சியாளரிடம் நான் உங்கள் ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன் என்பதுதான் இஸ்லாம் சொல்லக்கூடிய இன்றைக்கும் நடை முறை படுத்த வேண்டிய ஒப்பந்தமாகும் அதாவது பைஅத் ஆகும். இதுவல்லாத ஆன்மீக பைஅத் முறை எதுவும் இஸ்லாத்தில் இல்லை.

மற்ற மார்க்கங்களில் போலி சாமியார்கள் இருப்பது போன்று இங்கும் ஷேக்குகள் என்ற பெயரில் பல போலிகள் அவ்வப்போது உருவாகும். தமது முரீது வியாபாரத்தை மக்களிடம் நல்ல விலைக்கு விற்க சமூகத்தில் தம்மை மேம்பட்டவர்களாக காட்ட நபி (ஸல்) அவர்கள் பெயரை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக பொய்யை ஹதீஸ் என்ற பெயரில் ரெடிமேடாக உருவாக்கி வைத்துக் கொண்டார்கள். அப்படி உருவாக்கப் பட்ட ஹதீஸ்களில் ஒன்று மகா பயங்கரமானதாகும்.

ஒரு கூட்டத்திற்கு ஷெய்க்காக இருப்பவர் ஒரு உம்மத்திற்கு அனுப்பப்பட்ட நபியை போன்றவராவார் என்று நபி (ஸல்)சொன்னதாக ஒரு செய்தி உள்ளது. இப்னு உமர் (ரலி) அறிவிக்க, இப்னு ஹிப்பான் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி மூலமாக ஷெய்க்குகள் தங்களை நபிக்கு ஒப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன? இறைவன் எப்படி வஹி மூலமாக நபிமார்களோடு தொடர்பு வைத்திருக்கிறானோ அதே போன்று எங்களோடும் இறைவனுக்கு தொடர்பு உண்டு. நபிமார்கள் எப்படி இறைவனிடம் அந்தஸ்து மிக்கவர்களாக இருக்கிறார்களோ அதே போன்று நாங்களும் இறைவனிடம் அந்தஸ்து மிக்கவர்கள். சில நேரம் சில நபிமார்களுடன் இறைவன் பேசியது போன்று எங்களோடும் பேசுவான் என்றெல்லாம் மக்களை நம்பவைத்து மூளை சலவை செய்வதற்காகத்தான் இந்த செய்தியை உருவாக்கி இருக்கிறார்கள்.

தனி மனித வழிபாட்டுக்கு இஸ்லாத்தில் துளியும் அனுமதியில்லை என்பதை தனது தெளிவான வாழ்க்கையின் மூலமாக நிரூபித்து விட்டு போன நபி (ஸல்), இப்படி தனி மனித வழிபாட்டை ஊக்குவிக்க வழிவகுத்திருப்பார்களா..?

இந்த செய்தி நபியின் பெயரை பயன்படுத்தி புனையப்பட்டதாகும். இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இப்னு காஸிம் என்று ஒருவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர் அதனால் இந்த ஹதீஸை எடுத்துக் கொள்ள முடியாது என்று இதை பதிவு செய்த இப்னு ஹிப்பான் அவர்களே அடையாளம் காட்டி ஒதுக்கி விட்டார்கள்.

இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி என்று இப்னு ஹஜர் அஸ்கலானி குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்தான் முரீது போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களுக்கு ஆதாரமாக்கப் படுகிறது.

இவர்களுக்கு மறைவான ஞானம் உள்ளது என்று கூறுவது அடுத்த திட்டமிட்ட பொய்யாகும். இதை பொய் என்று நிருபிக்க பெரிய ஆதாரமெல்லாம் தேவையில்லை. மறைவான ஞானம் உண்டு என்று சொல்லக்கூடிய இந்த ஷைக்குகளிடம் சென்று முன்னெச்சரிக்கை இல்லாமல் ஓங்கி ஒரு அறை அறையுங்கள். மறைவான ஞானம் இருந்தால் அதை தடுத்துக் கொள்ளட்டும் பாரக்கலாம்!

மறைவான ஞானத்திற்கு சொந்தக்காரன் இறைவன் ஒருவனே, அவன் அறிவித்துக் கொடுக்காத எது ஒன்றையும் எவரும் சொந்தமாக அறிந்துக் கொள்ள முடியாது என்பதற்கு நபிமார்கள் வாழ்வில் ஏராளமான அத்தாட்சிகள் உண்டு.

நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்தால் எந்த துன்பமும் என்னை தீண்டியிருக்காது. நான் நிறைய நன்மையை பெற்றுக் கொண்டிருப்பேன் என்று நபியே நீர் கூறும் என்கிறான் இறைவன். (அல் குர்ஆன்)

இந்த குர்ஆன் வசனத்திற்கு விரிவுரையே நடத்துகின்ற மாதிரி நபி ஸல் அவர்கள் வாழ்வில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன.

உஹது போர் களத்தில் அவர்களின் கன்னம் கிழிக்கப்பட்டு பல் உடைக்கப்பட்டு மூர்ச்சையாகி கீழே விழுகிறார்கள். வயதான காலத்தில் இந்த தாக்குதல் அவர்களுக்கு பெறும் துன்பமாக இருந்தது. நபியை தாக்கி இரத்தம் சிந்த வைத்தவர்கள் உருப்பட மாட்டார்கள் என்று சபிக்கும் அளவுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்படுத்தியது அந்த தாக்குதல். நபி ஸல் அவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் தம்மை பாதுகாத்துக் கொண்டிருக்க முடியும்.

யூத பெண்ணொருத்தி ஆட்டிறைச்சியில் விஷம் கலந்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைக்கிறாள். அவள் அழைப்பை ஏற்று அவளை கண்ணியப்படுத்த அவளிடம் சென்று விருந்துண்ட நபிக்கு விஷத்தின் தாக்கம் உடம்பில் ஏறி அவர்கள் மரணிக்கும் வரை தொந்தரவுக் கொடுத்தது. அதிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

தன் அருமை மனைவி ஆய்ஷா அவர்கள் மீது, அவர்களின் கற்பு மீது சில நயவஞ்சகர்கள் களங்கம் சுமத்தியபோது நபி (ஸல்) உண்மை நிலவரம் புரியாமல் துவண்டு போனார்கள். ஆய்ஷாவுக்கு தலாக் கொடுத்து விடுவோம் என்று அவர்கள் நினைக்கக் கூடிய அளவிற்கு, பிறரிடம் ஆலோசனை செய்யக் கூடிய அளவிற்கு நிலமை மோசமாகியது. அன்னை ஆய்ஷாவின் கற்புக்கு இறைவன் உத்திரவாதம் கொடுத்து வசனங்களை இறக்கும்வரை இதே நிலைதான் நீடித்தது. நபி (ஸல்) அவர்களுக்கு ரகசிய ஞானம் இல்லை என்பதை ஆயிரக்கனக்கான ஹதீஸ்களை எடுத்துக் காட்டி நிரூபித்துக் கொண்டே செல்லலாம் பதில் மிக நீளமாகிவிடும் என்பதற்காக சுருக்குகிறோம்.

மறைவானவற்றின் திறவுகோல் அவனிடமே இருக்கிறது அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:59)

அல்லாஹ்வைத் தவிர வானங்கள் பூமியிலுள்ள எவரும் மறைவானவற்றை அறிய மாட்டார்கள். (அல் குர்அ10ன் 27:65)

இறை வேதத்தின் போதனைகளை உண்மை என்று நம்பக் கூடிய எந்த முஸ்லிமும் இந்த வசனங்களை விசுவாசித்து இதற்கு மாற்றமாக பொய் கூறி திரியும் போலி ஷைக்குகளை புறக்கணித்து மக்களுக்கு இனங்காட்டுவார்கள். இனங்காட்ட வேண்டும்.

ஆன்மீக பைஅத்திற்கு குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டப்படும் வசனம். அதன் விளக்கத்தையும் தெரிந்துக் கொள்வோம்.

60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும், அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக, மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக, நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

ஆன்மீகத் தலைவராக இருந்த நபி(ஸல்) அவர்களிடம் பெண்கள் பைஅத் செய்ய வேண்டும் என்று இந்த வசனம் குறிப்பிடுவதால் இன்றைக்கும் ஆன்மீக பைஅத் உண்டு என்பது சிலரது வாதம்

இந்த சந்தேகத்தில் இருக்கும் சகோதரர்களுக்கு புரியும் விதத்தில் இதை தெளிவாக விளக்குவோம்.

நீங்கள் ஒரு வியாபார தளத்தின் நிர்வாகியாக இருக்கிறீர்கள் அந்த அதிகாரத்தில் எங்களுக்கு நீங்கள் வேலை கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் நாங்கள் எந்த தவறும் செய்யாமல் நிர்வாகத்திற்கு மாறு செய்யாமல் கட்டுப்பட்டு நடப்போம் என்று நாங்கள் உங்களிடம் பைஅத் (உறுதி மொழி) செய்யலாம். நீங்கள் எங்களிடமிருந்து பைஅத் பெறலாம். இதில் அர்த்தம் இருக்கிறது என்று உங்களுக்குப் புரியும்.

இன்னொரு பைஅத் பற்றி கூறுகிறோம் அர்த்தம் புரிகிறதா என்று பாருங்கள். நீங்கள் வெளிநாட்டில் பணி புரிகிறீர்கள். நாங்கள் அரபகத்தின் பல பகுதிகளில் பணி புரிகிறோம். இப்போது நாங்கள் அனைவரும் சேர்ந்துக் கொண்டு 'இன்னாரே... நாங்கள் அரபகத்தில் நேர்மையாக நடப்போம் இதற்காக உங்களிடம் பைஅத் செய்யப் போகிறோம்' என்று கூறினால் 'ஆம் என்னிடம் பைஅத் செய்வது சரிதான்' என்று நீங்கள் கூறுவீர்களா... அல்லது 'உங்களிடம் பைஅத் வாங்குவதற்கு நான் யார்? இது கிறுக்குத் தனமாக இருக்கிறது' என்று புறக்கணிப்பீர்களா...

அல்லது இப்படி சிந்தித்துப் பாருங்கள் 'இதுதான் இஸ்லாம்.காம் குழுவினர்களே... நீங்கள் அனைவரும் இந்தப் பணியில் ஒழுங்காக செயல்பட வேண்டும் என்று என்னிடம் பைஅத் செய்யுங்கள்' என்று நீங்கள் கூறுவதாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த அறிவிப்பின் பொருள் வெறும் உளறலாகத்தானே இருக்க முடியும்.

பைஅத் செய்ய வேண்டுமென்றால் பைஅத் செய்பவருக்கும் அல்லது பைஅத் கேட்பவருக்கும் நமக்கும் மத்தியில் உள்ள தொடர்பு என்ன என்பதை நாம் முதலில் விளங்க வேண்டும். ஆன்மீகவாதிகளிடம் பைஅத் செய்வது அறிவுக்கு பொருத்தமானதா என்பதற்கு இப்போது வருவோம்

ஆன்மீகத்தை போதிப்பதாக சொல்லும் உண்மையான ஷேக்குகளிடம் போய் பைஅத் செய்கிறார்கள். எப்படி? நான் தவறாமல் ஐந்து வேலையும் தொழுவேன், நோன்பு வைப்பேன், ஜகாத் கொடுப்பேன் என்று. இப்போது சிந்தித்துப் பாருங்கள் இந்த வணக்கங்களுக்கும் ஷேக்குகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? தொழுகை அவருக்குரியதா.. நோன்பு அவருக்குரியதா.. அல்லது ஜகாத்து தான் அவருக்குரியதா... இதில் எதுவுமே அவருக்குரியதல்ல எனும் போது இவற்றை சரியாக செய்வேன் என்று அவரிடம் போய் எப்படி உறுதி மொழி எடுக்க முடியும்?

இன்னும் சொல்லப் போனால் இந்த வணக்கங்கள் அவர் மீதும் கடமையாகிறது. இந்த வணக்கங்களுக்காக ஷேக்குகளிடம் - முரீதுகளிடம் - பைஅத் செய்ய வேண்டுமென்றால் இதே கடமைகளை செய்ய வேண்டிய அவர்கள் யாரிடம் பைஅத் செய்வார்கள்? அவர்கள் பைஅத் செய்வதற்கு இன்னொரு ஷேக் வேண்டுமே... அவரைவிட பெரிய ஆன்மீகவாதி இருந்தால் அந்த ஆன்மீகவாதி மீதும் இந்த வணக்கங்கள் கடமையாக நிற்கும் அப்போது அவர் பைஅத் செய்வதற்கு இன்னொரு ஆன்மீகவாதி வேண்டும். இப்படியே ஆயிரம் ஆன்மீகவாதிகள் கிடைத்தாலும் கடைசியில் உள்ளவர் பைஅத் செய்வதற்கு ஆளில்லாமல் போய்விடும். அதாவது பைஅத் முற்றுப்பெறாமல் விபரம் புரியாமல் தடைப்பட்டு நின்றுவிடும். எனவே ஆன்மீகவாதிகளிடம் செய்யக் கூடிய பைஅத் என்பது தற்போது இஸ்லாத்தில் இல்லை. வணக்கங்கள் அனைத்தும் இறைவனுக்குரியது என்பதால் அவனிடம் நாம் பைஅத்(ஒப்பந்தம்) செய்துக் கொள்ளலாம்.

இப்போது நாம் சுட்டிக் காட்டிய வசனத்திற்கு வருவோம். அதில் ஆன்மீகவாதியிடம் செய்ய சொன்ன பைஅத்தும் இருக்கிறது. ஆட்சியாளரிடம் செய்ய வேண்டிய பைஅத்தும் இருக்கிறது.

முஃமினான பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை என்று கூறினால்... என்று துவங்குகிறது வசனம்.

இணைவைத்தல் பெரும் கெடுதியான காரியம் என்பது இறைவனின் அதிகாரத்திற்குட்பட்ட விஷயம் எனவே அவனிடம் தான் இது பற்றி பைஅத் செய்ய வேண்டும். ஆனால் இந்த ஆன்மீக பைஅத்தை மக்கள் ஏன் நபி(ஸல்) அவர்களிடம் செய்தார்கள்? இன்னும் சொல்லப் போனால் இணைவைக்கக் கூடாது என்பது நபிக்கும் பொருந்தக் கூடிய அவரும் கட்டுப்படக் கூடிய, அவர்களும் இறைவனிடம் பைஅத் செய்ய வேண்டிய ஒரு விஷயம். நிலமை இப்படி இருக்க நபி(ஸல்) பைஅத் பெற்றதன் காரணமென்ன?

பதில் மிகவும் இலகுவானது. நபி(ஸல்) அவர்கள் இறைவனால் நியமிக்கப்பட்ட தூதராக இருந்தார்கள். தூதர்களிடம் செய்யப்படும் ஒப்பந்தம் அதிகாரத்திடம் செய்யப்படும் ஒப்பந்தமாகவே கருதப்படும்.

இந்தியா, தொழில் துறையை வளப்படுத்த ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஜப்பானில் நடக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய பிரதமர் போய்தான் கையொப்பம் இடவேண்டும் என்கிற அவசியமில்லை. அந்தத் துறைக்காக அரசால் நியமிக்கப்பட்ட தூதர் கையோப்பமிட்டால் போதும். அவர் நியமிக்கப்பட்ட தூதராக இருப்பதால் அந்த கையோப்பம் இந்தியாவின் கையோப்பமாகவே உலகம் அங்கீகரித்துவிடும்.

நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்ததால் அவன் அனுமதிப்படி அவன் சார்பாக பைஅத்தை - ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்கிறார்கள். அவர்களுக்கு அந்த அதிகாரத்தை இறைவன் கொடுத்திருந்தான். அவர்களுக்கு பிறகு இறைத்தூதர்கள் மட்டுமே வகிக்க வேண்டிய அந்த ஆன்மீக தலைமை என்பது வேறு எவராலும் பூர்த்தி செய்யப்படாமல் - பூர்த்தி செய்ய முடியாமல் காலியாக இருக்கிறது. மறுமைநாள் வரை அப்படியே தான் இருக்கும்.

எனவே ஆன்மீகவாதியாக இருந்து அவர்கள் பெற்ற பைஅத்தை அவர்களுக்கு பிறகு யாரும் பெற முடியாது, பெறக்கூடிய அதிகாரமும் யாருக்கும் இல்லை. அதனால்தான் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த நன்மக்களான அவர்கள் யாரும் இறைவனுக்கு செய்யும் வணக்கங்கள் சம்பந்தமாக மக்களிடம் பைஅத் பெறவில்லை. அதே சமயம் ஆட்சிக்குரிய காரியங்களுக்கு பைஅத் பெற்றுள்ளார்கள்.

அதே வசனத்தில் தொடர்சியாக வரும் 'திருட்டு' 'கொலை' 'விபச்சாரம்' 'அவதூறு' போன்ற பாவங்களில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழியை - பைஅத்தை இன்றும் செய்யலாம். ஆனால் பெறுபவர்கள் ஆட்சியாளராக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் இந்த குற்றங்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள்.

இன்று ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பைஅத்கள் பல மோசடித் தனத்திற்கும், மார்க்கத்திற்கு எதிரான பல பாவமான காரியங்களுக்கும் வழிவகுத்துக் கொண்டிருப்பதால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பைஅத்களை நாம் கட்டாயம் எதிர்த்து மக்களுக்கு இனங்காட்ட வேண்டும்.
..................................

masdooka said...
முரீது வாங்க வேண்டுமா?பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர்.'ஆன்மீகப் பாட்டை' என்பார்கள், 'ஆத்மீகப் பக்குவம்' என்பார்கள், 'அந்தரங்கக் கல்வி' என்பார்கள், 'ரகசிய ஞானம்' என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள்.எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்.இஸ்லாத்தில் இல்லாத இந்த கிரேக்க அத்வைத தத்துவத்தை இவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உருவாக்கி ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுகிறார்கள்.இவர்களில் பல்வேறு பிரிவினர்கள் உண்டு. சில ஷெய்குகள் தம்மை அண்டி வந்து நெருக்கமானவர்களுக்கு, தனித்தனியாக சில திக்ருகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஒருவருக்கு சொல்லிக் கொடுத்ததை பிறருக்கு சொல்லக்கூடாது என்பார்கள்.இல்லற வாழ்க்கை முதற் கொண்டு தௌ;ளத் தெளிவாக பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தில் 'ரகசிய ஞானம்' என்று ஏமாற்றுகிறார்கள்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் 'நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?' என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் 'ஆம்! அல்லாஹ்வின் தூதரே' எனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நீயே சாட்சி!' என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி)இவ்ளவு தெளிவாக, தாம் எதையும் மறைக்கவில்லை என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்திய பிறகு - போலி ஷெய்குமார்கள் ரகசிய ஞானம் என்று ரீல் விடுகிறார்கள்.ஆன்மா பக்குவப்பட்டதாகச் சொல்லப் படுபவர்கள் ஆடம்பரப் பங்களாக்களில் வசிக்கின்றனர். உல்லாசக் கார்களில் பவனி வருகின்றனர். ஊருக்கு ஊர் வசூல் வேட்டைக்குப் போகும்போது கூடப் பணக்கார முரீதகளின் பங்களாக்களில் தான் தங்குவர். ஆன்மா பக்குவப்பட்ட(?) இந்த அடலேறுகள் ஏழைகளின் குடிசையில் தங்கலாமே!எந்த உழைப்பும் இல்லாமல் பிறரிடம் யாசகம் வாங்கித் தின்றே வயிறு வளர்ப்பவர்களுக்கு ஆன்மா பக்குவப்பட்டு விட்டதாம். ஏழ்மையில் வாழ்ந்துக் கொண்டு தம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, இந்த ஷெய்குமார்களுக்கு தட்சனையும் கொடுத்துக் கொண்டு, இறை வணக்கங்கள் புரிந்து வாழ்பவர்களுக்கு இன்னும் ஆன்மா பக்குவப்படவில்லையாம்.இஸ்லாத்திற்கு விரோதமான - குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படாத- புதுப்புது தத்துவங்களைக் கண்டுபிடித்து உளரிக் கொண்டிருப்பவர்கள், மறுமையை மறந்து விட்டார்கள். மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய இந்த மாபாதகர்கள் நிரந்தர நரகத்தில் வீழ்ந்துக் கிடப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இந்த போலி ஷெய்குமார்கள் சொன்னதை யெல்லாம் வேத வாக்காகக் கருதியவர்கள், திக்ரு என்னும் பெயரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் மந்திரங்களாக மொழிந்துக் கொண்டிருந்தவர்கள், இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ஸஜ்தாவை- தம்மைப் போன்ற சக மனிதர்களுக்குச் செய்து- சிரம் தாழ்த்தி வணங்கியவர்கள், அனைவரும் அல்லாஹ்வை அஞ்சவேண்டும்.அறியாமையால் பாமர மக்கள் காலில் விழுந்த போது அதனைத் தடுக்காமல் அகம்பாவத்துடன் ரசித்து வேடிக்கை பார்த்தவர்களே!, நாளை மறுமையில், படைத்த இறைவனுக்கு முன்னர் நிறுத்தப் படுவீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தப்பிக்க முடியாத அந்த நாளை மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.அப்துஸ்ஸலாம் மஸ்தூக்காhttp://masdooka.blogspot.com
February 1, 2008 12:19 AM

Friday, January 25, 2008

காப்பீடு நிறுவனத்திற்கு லட்டர்

அஸ்ஸலாமு அலைக்கும். நான் ஒரு வணிக நிறுவனத்தில் உதவி கணக்கராக(Assistnt Accountant) பணிப் புரிகின்றேன். அது ஒரு ஏற்றுமதி (Export) நிறுவனம். சரக்குகளை கடல் வழியாக ஏற்றுமதி செய்யும்போது அதற்கு காப்பீடு (Insurance)செய்வது இன்றியமையாத ஒன்று. சில சமயங்களில் எனது மேலாளர் (Manager)ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கு காப்பீடு செய்யக்கோரி காப்பீட்டு நிறுவனத்திற்கு என்னை கடிதம் அனுப்ப பணிக்கிறார். எனது கேள்வி என்னவெனில் இவ்வாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு கடிதம் எழுதுவதால் எனது அனைத்து வருமானமும் ஹராம் ஆகுமா?

Name: Naser
email:
md_naser68@...
Location: DUBAI
Subject: Question

வஅலைக்குமுஸ்ஸலாம்.
அன்புச் சகோதரருக்கு, சில நாட்களுக்கு முன் ''நிறுவனத்தில் கணக்கெழுதுவது' பற்றி துபையிலிருந்து ஒரு சகோதரர் கேட்டிருந்த கேள்வியை ஒட்டியே உங்கள சந்தேகமும் அமைந்துள்ளது. எனவே அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதில் உங்களுக்கும் பொருந்தும். கீழுள்ள லிங்கிலிருந்து நீங்கள் பதிலைப் பெற்றுக் கொள்ளலாம.

கணக்கெழுதும் போது
.........................

உறையூர்காரர் கேட்டிருந்த 'அரபுமொழி' பற்றுப்பற்றிய சந்தேகத்திற்கு விரிவான விளக்கம் கீழுள்ள சுட்டியில் கொடுத்துள்ளோம்.

அரபு மொழி பற்று அவசியம் தான்.
...............................

Sunday, January 20, 2008

ஸஹாபாக்கள் நட்சத்திரங்களா?

அஸ்ஸலாமு அலைக்கும். நபி (ஸல்l) அவர்கள் \" என்னுடைய சகாபாக்கள் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை போன்றவர்கள், அவர்களில் நீங்கள் எவறைப்பின்பற்றினாலும் வெற்றி அடைவீர்கள்\" என்று கூறி இருக்கும்போது நாங்கள் அவர்களை பின்பற்ற மாட்டோம் நபி (ஸல்) அவர்கள் செய்தவற்றை மட்டுமே பின்பற்றுவோம் என்று சில சகோதர்கள் கூறுகின்றனர். மேலும் கண்ணியமிக்க \"சகாபாக்களை நானும் பொருந்திக் கொண்டேன் \" அவர்களும் என்னை பொருந்திக் கொண்டார்கள்\" என்று அல்லாஹ்வே சான்று தரும்போது சில மூடர்கள் சகாபாக்கள் அறியாமல் செய்த சில தவறுகளை சொல்லி காட்டி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்ற்படுத்துவதை பற்றி தங்களின் கருத்து என்ன?


AZEEZUDDHEEN
skn_azeesudeenஅட்gmail.com
Dubai



நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள நபித்தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் என்ற செய்தி இரண்டு விதத்தில் பலவினப்படுகின்றது.

ஒன்று: அதன் அறிவிப்பாளர் தொடர்:

இரண்டு: அதன் கருத்து.

'அஸ்ஹாபீ கன்னுஜூமி பிஅய்யிஹிம் இக்ததைத்தும் இஹ்ததைத்தும்',

அறிவிப்பாளர் வரிசையில் உள்ள குறைபாடுகள். இந்த ஹதீஸை இமாம் இப்னுஹஸ்மு(ரஹ்) அவர்கள் தமது 'அல் இஹ்காம்' என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். இந்த ஹதீஸைப்பற்றி 'இது ஏற்கத் தகாத ஹதீஸாகும்' என்று குறிப்பிடுகிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய ஸலாம் இப்னு ஸூலைம் என்பவர் நிறைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவராவார். 'இந்த ஹதீஸூம் அத்தகைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில் ஒன்றாகும்' என்றும் இமாம் இப்னுஹஸ்மு அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஹதீஸை இமாம் 'இப்னு அல்தில்பர்' (ரஹ்) அவர்களும் தமது 'ஜாமிவுல் இல்மி' என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இதன் அறிவிப்பவர்களில் இடம்பெறுகின்ற 'ஹாரிஸ் இப்னு குஸைன்' என்பவர் ஹதீஸ்கலையில் அறியப்படாதவர். இது ஏற்றத்தக்க ஹதீஸ் அல்ல என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இந்த 'ஸலாம் இப்னு ஸூலைம்' என்பவரைப்பற்றி இமாம் இப்னு ஹர்ராஷ் அவர்கள் 'இவர் பெரும் பொய்யர்' என்றும், இமாம் 'இப்னு ஹிப்பான்' அவர்கள் 'இவர் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவர்' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கருத்துத் தவறு:

சில நட்சத்திரங்களை வைத்து நேரம், காலம், வழி அறியப்படுகின்றது. சில நட்சத்திரங்களிலிருந்து தான் இந்த படிப்பினை கிடைக்கின்றதே தவிர எல்லா நட்சத்திரங்களும் மக்களுக்கு வழிகாட்டுவதில்லை. பொருத்தமில்லாத உவமைகளை நபி(ஸல்) கூற மாட்டர்கள்.

நபித்தோழர்கள் அனைவரின் அறிவும், ஆற்றலும், தகுதியும் ஒரே விதத்தில் அமைந்தவையல்ல. இறைவனால் வழங்கப்பட்ட சிறப்பில் கூட அவர்களுக்கு மத்தியில் வேறுபாடுகள் இருக்கின்றன.

1)உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் எவரும் சமமாகமாட்டார். (மக்காவின்) வெற்றிக்குப் பின் செலவு செய்து போரிட்டவர்களை விட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்': எனினும் அல்லாஹ் எல்லோருக்கும் அழகானதையே வாக்களித்திருக்கிறான். மேலும்; அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (57:10)

மக்கா வெற்றிக்கு முன்னுள்ளவர்களின் நிலையும், மக்கா வெற்றிக்கு பின் செலவிட்டவர்களின் நிலையும் சமமல்ல என்று இறைவன் தரத்தைப் பிரிக்கிறான்.

2)பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அவர்களிலும் சொர்க்கத்தின் நற்செய்திப் பெற்ற பத்து நபித்தோழர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அந்தப் பத்துப் பேர்களிலும் நாற்பெரும் கலீபாக்களின் நிலை மிகவும் உயர்ந்தது. நான்கு கலீபாக்களிலும் முதலிருவரின் நிலை பன்மடங்கு மேலானது. அந்த இருவர்களிடம் கூட அபூபக்கர் (ரலி) அவர்கள் மிகமிக மேலான தகுதியை பெற்றவர்களாவார்கள்

எந்த நபித்தோழரையும் பின்பற்றலாம் என்ற உவமை இப்படி பல வழிகளில் முரண்படுவதால் அந்த செய்தியை ஒதுக்கித் தள்ளியாக வேண்டும்.

குர்ஆனும் சுன்னாவும் மட்டுமே மார்க்கத்தின் ஆதாரங்களாகும். நபி(ஸல்) அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்த செயல்களே மார்க்கமாகாது எனும் போது (உதாரணம் தலைப்பாகை அணிதல்) நபித்தோழர்களின் செயல்களை எப்படி மார்க்க ஆதாரமாக்க முடியும்?

இது அல்லாஹ்வின் மார்க்கம், இந்த மார்க்கத்தில் எதுவொன்றிற்கும் அல்லாஹ்வின் வழிகாட்டல் வேண்டும். அல்லது அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெற்ற நபியுடைய வழிகாட்டல் வேண்டும். இதுவல்லாத எதுவும் மார்க்க ஆதாரமாகாது.

நபித்தோழர்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்பது வேறு. அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது வேறு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும். நபித்தோழர்களுக்கு மத்தியில் சிறப்பில் ஏற்றத் தாழ்வு இருந்தாலும் அவர்களுக்கு பின்பு இன்று வரை வந்த கோடான கோடி முஸ்லிம்களுடன் ஒப்பிடும் போது அவர்களின் சிறப்பும் அந்தஸ்த்தும் மகத்தானவை. அதற்காக அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற நிலையை இறைவன் ஏற்படுத்தவில்லை.

நபித்தோழர்களுக்கு மத்தியிலேயே இஸ்லாமிய சட்டங்களை விளங்குவதில் சில - பல கருத்து வேறுபாடுகள் நிலவின. ஹதீஸ் கிதாப்களுடன் தொடர்புள்ளவர்களுக்கு இது தெரியும்.

எனவே பின்பற்றத் தகுதியானவர்கள் நபி(ஸல்) அவர்கள் மட்டுமே.

நபித்தோழர்களை யாரும் திட்டமாட்டார்கள் அதிலும் குர்ஆன் சுன்னாவை விளங்கியவர்கள் நிச்சயம் திட்ட மாட்டார்கள். அவ்வாறு திட்டுபவர்கள் ஒட்டு மொத்த சமுதாயத்தால் ஒதுக்கித் தள்ளப்படுவார்கள்.
...............................

Friday, January 18, 2008

உள்ளுரில் குறைத்துத் தொழுதல்!

சகோதரருக்கு,

நாம் (ஜம்மு) தொழுகையை நம் வசதிக்கேற்ப எளிதாக்கிக்கொள்ள சேர்த்து தொழலாமா? சஹிஹ் ஹதீஸ் தங்கள் பார்வைக்கு...

நூல் மாலிக்... முவத்தா வால்யிம் vol 1, பக்கம் 161, இப்னு அப்பாஸ் கூறியதாவது... நபி (ஸல்) அவர்கள் லுஹர், அஸர் சேர்த்து தொழுதுள்ளார்கள். மற்றும் மக்ரிப், இஷா சேர்த்து தொழுதுள்ளார்கள் எந்த காரணமும் இல்லாமல்.

சஹிஹ் முஸ்லிமில் கூட்டுத்தொழுகை என்ற தலைப்பின்கீழ்...இப்னு அப்பாஸ் அறிவிப்பதாவது... எந்த கூட்டதாருடைய (எதிரி) பயமும் இல்லாத நேரத்திலும், பிரயாணம் இல்லாத நேரத்திலும் லுஹர், அஸர் சேர்த்து தொழுதுள்ளார்கள். மற்றும் மக்ரிப், இஷா சேர்த்து தொழுதுள்ளார்கள். (சஹிஹ் முஸ்லிமில் (ஆங்கில மொழியாக்கம்) பாகம் CCL, Tradition #1515.

இதைப்பற்றி தங்களுடைய விளக்கம் தேவை.

hssnansarஅட்yahoodotcom

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுப் போன்று ஆதாரப்பூர்வமான செய்திகள் பல நூல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது உண்மைதான். மேலும் நூல்கள் அஹ்மத் 3152 திர்மிதி 172 அபுதாவூத் 1025.

جمع رسول الله ‏ ‏ صلى الله عليه وسلم ‏ ‏ بين الظهر والعصر والمغرب والعشاء في ‏ ‏ المدينة ‏ ‏ من غير خوف ولا مطر

நம்முடைய அனைத்துத் தொழுகைகளையும் தீர்மானிப்பதற்கு இந்த ஒரு கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நபி(ஸல்) காலாகாலத்துக்கும் இப்படி சேர்த்து (ஜம்வு) குறைத்து (கஸ்ர்) தொழுதுக் கொண்டிருக்கவில்லை. 'பயமோ மழையோ இல்லாத நேரத்தில் நபி(ஸல்) அவ்வாறு செய்துக் காட்டியுள்ளார்கள் என்பதிலிருந்து சில அவசரங்களுக்கு அவ்வாறு செய்துக்கொள்ளலாம் என்றுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக இந்த ஒரு செய்தியை மட்டும் ஆதாரமாகக் கொண்டு எப்போதும் அவ்வாறு செய்துக் கொள்ளலாம் எனறு முடிவெடுத்தால்,

إنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

இந்த வசனத்துக்கு விளக்கமாக இநைத்தூதவர்கள் தம்முடைய வாழ்நாள் முழுவதும் தொழுகையின் நேரங்களை விளக்கி அதற்குரிய நேரங்களில் தொழுதுக் காட்டியுள்ளார்கள்.

எனவே உள்ளுரில் இருக்கக் கூடியவர்கள் தொழுகையை அதற்குரிய நேரங்களில் தான் தொழ வேண்டும். தவிர்க்க முடியாத சில நேரங்களில் சேர்த்து - குறைத்து தொழுதால் அதை கூடாதென்று சொல்ல முடியாது. ஏனெனில் அதற்கும் நபியிடம் வழிகாட்டல் இருக்கின்றது.

பிரயாணிகளாக இருந்தால் அவர்கள் எப்பொழுதும் சேர்த்து குறைத்துத் தொழுதுக் கொள்ளலாம்.
......................................................

Monday, January 14, 2008

பொது மையவாடிக்கு பெயர்?

நான் பொதக்குடி என்ற ஊரை சேர்ந்தவன். என்னுடைய கேள்வி, எங்கள் ஊரில் உள்ள மையவாடி முகப்பில் தமிழில் 'முஃமின்களின் பூங்கா' என்று எழுதப்பட்டுள்ளது. மையவாடியில் அடக்கப்படுபவர்களை முஃமின்கள் என்று நாம் அழைக்கலாமா..? எங்க ஊரில் எல்லாம்??? தெரிந்த மத்ஹப் ஷேக் உள்ளார். அவரின் உத்தரவின் பேரில் இது செய்யப்படுகின்றது. இது சம்மந்தமாக விளக்கம் தேவை.

பொதக்குடி சலீம் (ஜித்தா)

nhsaleemஅட்gmailடாட்com
..................................................

படிப்பாளி said...
பொது மையவாடிக்கு பெயர் வைப்பதெல்லாம் ஒரு பிரசசனையல்ல. மதீனாவில் உள்ள பொது மையவாடிக்கு நபி(ஸலல்) காலத்திலிருந்தே 'ஜன்னத்துல் பகி' என்று பெயருள்ளது. அது மாற்றப்படவில்லை.பொது மையவாடியில் அடக்கப்பட்டுள்ளவர்களை முஃமின்கள் என்று குறிப்பிடுவதும் தவறாக தெரியவில்லை. ஏனெனில் பொதுக் கப்ரஸ்தான்களுக்கு நாம் செல்லும் போது அவர்களுக்குக்காக பிரார்த்திக்கும் அந்த பிரார்த்தனையில்

'عن ‏ ‏أبي هريرة ‏ أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أتى المقبرة فقال ‏ ‏ السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون

'முஃமினான மண்ணறைவாசிகளே...உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.. என்று மண்ணறைவாசிகளை பொதுவாக முஃமின் என்று சுட்டிக் காட்டியுள்ளதால் முஃமின்களின் பொதுமையவாடி என்று குறிப்பிடுவது தவறல்ல என்று விளங்கலாம்................
January 17, 2008 10:02 PM

Thursday, January 3, 2008

ஷேர்மார்க்கட் ஹராமா..?

அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் நான் வணிக மற்றும் தொழில் கல்வி பயிலும் மாணவன். (ஷேர் மார்க்கட்) பங்கு வர்த்தகத்ததிலிருந்து கிடைக்கும் பணம் ஹராமா... ஹலாலா... என்ற விளக்கம் வேண்டும்.
பங்கு சந்தை என்பது பொருளின் மீது முதலிடு செய்து பொருளின் விலைக் கூடும் போது முதலீட்டை விற்று லாபம் பெறுவதாகும்.

டைடன் கம்பெனி புதிதாக ஒரு வாட்சை அறிமுகப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் மொத்த முதலீட்டுக்கான தொகையில் பாதியை வெளியில் பங்குதாரர்களிடமிருந்து பெறுவதற்கான அறிவிப்பை வெளியிடுகிறது. நூறு பங்குதாரர்கள் இதில் சேரலாம் ஒரு பங்கின் விலை ரூ 1000 (புரிந்துக் கொள்வதற்காக குறைந்த தொகையைக் குறிப்பிட்டுள்ளோம்) என்று வகுக்கிறது.

இப்போது நூறு பங்குதாரர்கள் இந்த வியாபாரத்தில் இணைகின்றார்கள். உதாரணமாக 10 பங்குக்குரிய பணத்தை (10,000) நீங்கள் செலுத்தி பத்து பங்குதாரர் ஆகின்றீர்கள். இதேபோல் கூடுதலாகவோ - குறைவாகவோ நூறு பங்கு அந்த கம்பெனிக்கு கிடைத்து விடுகிறது. வாட்ச் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தவுடன் அதன் தரம் சிறப்பாக இருந்து நல்ல விற்பனையைக் கண்டால் அதன் மீது முதலீடு செய்த தொகை கூடுதல் லாபத்தைப் பெற்று உங்கள் பங்கின் தரம் உயரும். இந் நிலையில் உங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது அல்லது நீங்கள் இந்த பங்கு தேவையில்லை என்று முடிவு செய்தால் நீங்கள் பெற்றுள்ள 10 பங்கையும் நீங்கள் பிறருக்கு விற்பனை செய்து விடலாம். நாம் முதலீடு செய்த பொருளின் மார்க்கெட் நிலவரத்தைப் பொருத்து நம் பங்கின் மீது கூடுதல் லாபம் வைத்து விற்கலாம்.

நீங்கள் ஒரு பங்கை ரூ 1000, என்ற கணக்கில் எடுத்தீர்கள் இப்போது அதை ரூ 2000 என்று கூட நீங்கள் தீர்மானிக்கலாம். இதை தீர்மானிப்பதற்கு - அதாவது விலையை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் என்று - ஏராளமான ஏஜண்டுகள் இருக்கிறார்கள். (இவர்களில் அனேகருக்கு ஹர்ஷத் மேத்தா தான் குரு என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது)

உங்களது 10 பங்கையும் ரூ 20,000 க்கோ அல்லது கூடுதல் குறைவாகவோ நீங்கள் விற்று விட்டால் உங்களுக்கும் அந்த வியாபாரத்திற்கும் உள்ள தொடர்பு முடிந்து விடும். உங்களிடமிருந்து பங்கை வாங்கியவர் அதைத் தொடர்வார்.

தேர்தல் களம், ஆட்சி மாற்றங்கள், சர்வதேச நெருக்கடி போன்ற நிலைகள் உள்நாட்டிலோ அகில உலகிலோ ஏற்படும் போது பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்படும் அல்லது பங்கு சந்தையின் வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்கு தடைப்படும்.

தற்போது இந்தியாவின் பங்கு சந்தை நிலவரம் அவ்வளவாக சொல்லும் படியாக இல்லை என்ற தகவல்கள் வருகின்றன.

சற்று பின்னோக்கி சென்று உதாரணம் தேடினால், ரிலையன்ஸ் பட்ட பாட்டை குறிப்பிடலாம்.

அதன் தரம் ரூ 474 என்ற அளவிற்கு கீழிறங்கியது. தேர்தல் நிலவரங்களின் அறிவிப்பு வர வர கிடுகிடு என்று மேலேறி 524 ஆகியது. பின்னர் பேரங்கள் முடிந்தவுடன் 511 என்று முடிவுக்கு வந்தது.

தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் பங்கு பெரும் வீழ்ச்சி அடையும் என்று பலரும் கருதினார்கள். காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியவுடன் 'பங்குச் சந்தைக்கு வாழ்விருக்கு' என்று பலர் நிம்மதியடைந்தார்கள்.

இதுவே பங்குச் சந்தையின் நிலவரம்! எனவே இதைக் கூடாது என்று சொல்வதற்குரியய முகாந்திரங்கள் எதுவுமில்லை.

நாம் முதலீடு செய்யும் நிறுவனங்களை ஆராய்ந்து பார்த்துக் கொள்வது இறையச்சத்திற்கு உகந்ததாகும்.

நிறைய லாபத்திற்காக வாய் பிளந்து காத்திருக்காமல் பங்கின் விலை உயரும் போது நம் பங்கை விற்று விடுவதே ஷேர்மார்ககெட் சூத்திரர்களின் சூட்சுமத்தின் அடையாளமாகும். இது கூடுதல் 'அட்வைஸ்'