வலைப்பதிவில் தேட..

Sunday, May 4, 2008

பைஅத் - உடன்படிக்கை

நான் உங்கள் இணையத்தளத்தை கடந்த நான்கு ஆண்டுகளாக பார்த்து படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ள இணையமாக இருக்கின்றது.
எனக்கொரு கேள்வி.

பைஅத் பற்றியது பிறருடைய கைகளைப் பிடித்து நான் தினமும் ஐந்து முறைத் தொழுகிறேன்.. ஜக்காத் கொடுக்கிறேன் என்று சொல்வதற்கு குர்ஆன் சுன்னாவில் ஆதாரம் உள்ளதா..

யார் இதற்கு பணம் கொடுத்து யார் இயக்குகிறார்கள்?
Name: M.Mohamed Ali
Location: Abu Dhabi
Subject: Question

இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்கங்கள் -வழிபாடுகள் ஆகியவற்றிர்க்கு "அவற்றை தவறாமல் செய்கின்றேன்" நம்மைப் போன்ற மனிதர்களிடம் பைஅத் செய்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத - முட்டாள்தனமான ஒன்றாகும்.

நாம் யாரிடம் பைஅத் செய்கின்றமோ அவரும் நம்மைப் போன்று நாம் செய்யும் கடமைகளை செய்யக் கடமைப்பட்டவராவார். நாம் அவரிடம் பைஅத் செய்ய வேண்டும் என்றால் அவர் யாரிடம் போய் பைஅத் செய்வார் என்ற கேள்வியை முன் வைத்தால் இந்த ஆன்மீக பைஅத் மோசடி விளங்கி விடும்.

'பைஅத்' என்றால் 'உடன்படிக்கை' என்று பொருள். உலகக் காரியங்களில் நமக்குள் நாம் பைஅத் செய்துக் கொள்ளலாம், செய்தும் கொள்கிறோம். இதுமட்டும் தான் அனுமதிக்கப்பட்டது. இதை கடந்த ஆன்மீக பைஅத் ஏமாற்று வேலையாகும்.

இது பற்றி மிக விரிவாக ஏற்கனவே எழுதியுள்ளோம்.

ஆதாரமற்ற ஆன்மீக பைஅத் செல்க

உலகில் எல்லாத்தரப்பினரும் ஏதோ காரணத்துக்காக வன்முறையில் ஈடுபடுகின்றனர். அதில் சில முஸ்லிம்களும் அடங்கத்தான் செய்வர். இந்த வன்முறையை ஊக்குவிக்க சிலரது பொருளாதாரமும் பயன்படத்தான் செய்யும். அவரகள் யார் என்று கண்டுபிடிப்பது அரசு சட்டத்துறையின் வேலையாகும்.

No comments: