வலைப்பதிவில் தேட..

Thursday, July 24, 2008

இகாமத் உண்டா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ஆண்கள் தனியாக தொழும்போது பாங்கும் இகாமத்தும் சொல்லி தொழவேன்டும் என்ற ஹதீஸ் அறிவேன். இது பெண்களுக்கும் பொருந்துமா..?

Name: முஹம்மது இக்பால்
email: mimhouse@...
Location: Sharjah - U.A.E

பெண்கள் பாங்கு இகாமத் சொல்லக் கூடாது என்று எந்த ஒரு தடையையும் நம்மால் பார்க்க முடியவில்லை. நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் எந்தக் காரியத்தையும் ஆண் பெண் இருபாலாரும் செய்யலாம்.

பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள் என்று நபி(ஸல்) கூறிய செய்தி அபுஸயீத் அல்குத்ரி என்ற நபித்தோழர் வழியாக பல நூல்களில் இடம் பெறுகின்றது. பாங்கு சொல்பவர்களின் அதே வாசகத்தை பெண்களும் திரும்ப சொல்லலாம் என்ற அனுமதியே அவர்கள் தங்கள் தொழுகையில் பாங்கு சொல்லிக் கொள்ளலாம் என்பதை விளக்குகின்றது.

இப்னு உமர் போன்ற நபித்தோழர்கள் பெண்கள் பாங்கு இகாமத் சொல்லிக் கொள்வதை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்கள். எனவே பெண்கள் தங்கள் தொழுகையில் அவர்களுக்குள் பாங்கு இகாமத் சொல்லிக் கொள்ளலாம்.

பெண்களுக்கு பாங்கு இகாமத் கிடையாது என்போர் எடுத்துக் கொடுக்கும் ஆதாரம் சரியானதாக இல்லை. பலவீனமான செய்தியாக உள்ளது. எனவே அதை வைத்து ஒரு நல்லமலை தடுக்க முடியாது.

No comments: